Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all 170 articles
Browse latest View live

ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


அனிச்சம்


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும்விருந்து” (குறள் 90)              

                                                              

முகம் பாதி பண்டம் பாதி 


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்  (குறள் 1111)                                                         


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்    (குறள் 1120)                                                           


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை  (குறள் 1115)                                                           


கலித்தொகை

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்

புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த

தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்

பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின்

இன்று நன்று, என்னை அணி  - 91 : 1-5


குறிஞ்சி


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 

- தேவகுலத்தார் (குறுந்தொகை)


நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 

பாவை அன்ன வனப்பினள் இவள்'என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை-

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. 

- பாண்டியன் மாறன் வழுதி (நற்றிணை 301)


சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் 

காதல் செய்தவும் காதலன்மை

யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. 

வெறி பாடிய காமக்கண்ணியார் (நற்றிணை 268)


குறிஞ்சி பூங்கோதை போலும் குங்கும முலையினாள்

- சீவக சிந்தாமணி


கொய்யாக் குறிஞ்சி பலபாடி - புறப்பொருள் வெண்பாமாலை



ஞானத்தேடல் - Ep 71 - சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கரபந்தம் - (Gnanathedal)

$
0
0

 

சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கர பந்தம்


தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த

கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த

பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க

தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே


அன்புள்ள மக்களை உடைய நாகையில், யாழ் பயிலும் அழகிய பெண்களின் தாமரை மலரைப் போன்ற கண்களை மன்மதன் அம்பினால் காதல் வயப்பட்டு நீலமலரைப் போன்ற கண்களையும் கூட ஒப்பாக  கூற முடியாது


போதிவானவன்


மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க

மடமயி லியற்றக மாதிரம் புதைத்து

வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க

வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி

மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்

கன்னித் துறைவன் கனகச் சிலம்பே


வளவனின் தலைவி அகமகிழ்வோடு மலர்ந்த சோலையில் இருக்கிறாள் எவ்வாறெனில். மயில்கள் தோகை விரித்து ஆடும்போது கார்மேகம் சூழ்ந்து தேன் நிறைந்த மலர்களில் தேனீக்கள் தேன் உண்ணும், அது போல் தலைவியின் நீளமான மலர் சூடிய கரிய கூந்தல் இருந்தது


அறமே தனமாவது 

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)

$
0
0


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal)

$
0
0

 

சித்திரக்கவி - சுழிகுளம்


கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா

முயல்வ துறுநர்

திருவ ழிந்துமாயா


செய்யுளால் முதிர்ந்தார் செய்யும் செய்யுளே விலையிடுதற்கரிய செய்யுளெனவும், இடைவிடாது முயல்வார் செல்வமழிந்து கெடாதெனவு மாம்.


மதந  விராகா வாமா

தநத  சகாவே நீவா

நதத நதாதா வேகா

விசந விரோதா காரா


மதனா! அவா இல்லாதவனே! ஒளியை உடைய வனே! குபேரனுக்கு நண்பனாகவுள்ளானே! முகிலினுமதிகமான வள்ளலே! பாம்பணியால் விரோதமான தோற்றத்தையுடையவனே! எங்கள் வருத்தங்களை நீக்கிக் காப்பாயாக!

ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal)

$
0
0


 காலக்கணக்கு

2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 

 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை

 2 மாத்திரை கொண்டது - குரு 

 2 குரு கொண்டது - உயிர் 

 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 

12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 

60 விநாடி கொண்டது - நாழிகை

 7.5 நாழிகை கொண்டது - சாமம்

 4 சாமம் கொண்டது - பொழுது 

 2 பொழுது கொண்டது - நாள்

30 நாள் கொண்டது - மாதம்

12 மாதம் கொண்டது - வருஷம். 


யுகங்கட்கு ஆண்டு அறிதல்


இருநூற் றொருபதுடன் ஆறா யிரத்தை 

இருநால் இருமூன்றின் நாலில் - நிருமித்த 

பின்னிரண்டு தன்னில் பெருக்கில் திருமாதே 

நண்ணுமொரு நாலுகத்தின் சீர்


உரை: அழகிய திருமகளுக்கு ஒப்பானவளே! கிரேதாயுகம், திரேதாயுகம். துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் ஆண்டுகள் எவ்வளவு எனின். இருநூற்றுப் பதினாறாயிரத்தை (உாகயசுசூ) எட்டிலும் ஆறிலும் நாலிலும் இரண்டிலும் பெருக்க, எட்டில் பெருக்கிய பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம் கிரேதாயுகத்து ஆண்டு எனவும். ஆறில் பெருக்க, பன்னிரண்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஆறாயிரம் திரோதாயுகத்து ஆண்டு எனவும். நான்கில் பெருக்க எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் துவாபரயுகத்து ஆண்டு எனவும். இரண்டில் பெருக்க நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் கலியுக ஆண்டு எனவும். இந்த நான்கு யுகமுங்கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்: இஃதொரு சதுர்யுகம் என்று சொல்லப்படும்.

தேவகாலம் அறிதல்


எண்ணுஞ் சதுர்யுகமீ ராயிரங் கூடில் 

நண்ணுஞ் சதுர்முகத்தோன் நாளாகும் பெண்ணணங்கே

ஐயாறு திங்களே ஆறிரண்டும் ஆனதே 

பொய்யாத நூறும் புகும்.


உரை : திருமகளுக்கு ஒப்பானவளே! மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது நான்முகனுக்குப் பேராயுள். இந்தப் பேராயில் நூறு (m) சென்றால் ஆதிநான்முகனுக்கு யுகம் முடிவு.

நான்கு யுகமுங் கூடின ஆண்டு நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதாயிரம் இது மகாயுகம் என்று சொல்லப்படும். இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு அரசாட்சி: இந்த மனுவுக்கு அரசாட்சி எழுபத்து நான்கு சென்றால் இந்திரனுக்கு அரசாட்சி. இந்திரனுக்கு இந்த அரசாட்சி இருநூற்று எழுபது சென்றால் நான்முகனுக்கு ஒருநாள் இந்நாள் முப்பது சென்றால் ஒரு திங்கள்: இத்திங்கள் பன்னிரண்டு சென்றால் ஓர் ஆண்டு. இந்த ஆண்டு நூறு சென்றால் நான்முகனுக்கு வாணாள் முடிவு. இவ்வாறு முந்நூற்று அறுபது சென்றால் ஆதிநான்முகனுக்குப் பிரளய காலம் பிரளய காலம் நூறு சென்றால் திருமாலுக்கு ஒரு கற்பம் இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு மயிர் உதிரும். இந்த உரோமச மகா இருடிக்குப் பத்துக்கோடி மயிர் உதிர்ந்தால். மீனச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு செதிள் உதிரும். இவ்வாறு மீனச மகாஇருடிக்கு ஒரு கோடி செதிள் உதிர்ந்தால் பரத்துவாச மகாஇருடிக்கு ஒரு நிமிடம். இந்தப் பரத்துவாச மகாஇருடிக்கு இவ்வாறு முப்பது கோடி சென்றால் மகாசத்தி தலைமயிர் அவிழ்த்து முடிப்பாள். இவ்வாறு எழுநூற்று எண்பதுகோடி சத்திகள் தலைமயிர் அவிழ்த்து முடித்தால். இறைவனுக்கு அண்மையில் இருக்கின்ற உருத்திரமாகாளிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லப்பெறும்.

ஞானத்தேடல் - Ep 75 - சித்திரக்கவி - சருப்பதோபத்திரம் - (Gnanathedal)

$
0
0

 

சித்திரக்கவி - சருப்பதோபத்திரம்


மாவா நீதா தாநீ வாமா

வாயா வாமே மேவா யாவா

நீவா ராமா மாரா வாநீ

தாமே மாரா ராமா மேதா


விளக்கம்: பெரியவனே, நீதி உடையவனே, வற்றாத செல்வம் உடையவனே. நீ என்னுள் இருப்பின் கிடைக்காதது என்ன, வேறு என்ன தேவை. நீ இராமனைப் போன்றவன், மன்மதனைப் போன்றவனும் ஆவாய். நீ மேகங்கள் போல வளம் தருபவன்.  ஆதலால் நீ அணிந்திருக்கும் மலர்மாலை போல  உன் நெஞ்சத்தில் எங்களுக்கும் இடம் அருள்வாய்.


ஞானத்தேடல் - Ep 76 - சிற்பிக்கு வெற்றிலை மடித்து கொடுத்த உத்தமர் - (Gnanathedal)

$
0
0


 சிற்பிக்கு வெற்றிலை மடித்து கொடுத்த உத்தமர் (அண்ணாமலை ரெட்டியார்) 


வெங்கை நகரிருப்பு வேண்டியே- பங்குபடு

பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம்

மண்ணாசை தானு மருவுதலால்-விண்ணாசை

கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண்

டெள்ளுங் குறியவுரு வின்றுபோய்த்- தெள்ளும்

கனவு நனவுபோற் காட்டியிரந்து

- வெங்கையுலா


கருப்ப இல்லிற்‌ இணையில்லை யென்னும்‌ திருவெங்கை


மல்லலுறச்‌, சக்தி பொருத்தித் தகுஞ்சீர்‌ கெடா

தடுக்குப்‌, புந்தி மகிழற்‌ புத வணித்தா - முந்தையோர்‌,

செய்யுள்போற்‌ செய்த திருக்கோயில்‌

ஞானத்தேடல் - Ep 77 - சித்திரக்கவி - முரசபந்தம் - (Gnanathedal)

$
0
0


 சித்திரக்கவி - முரசபந்தம்


கான வாரண மரிய வாயினனே

தான வாரண மரிய வாயினனே

மான வாரண மரிய வாயினனே

கான வாரண மரிய வாயினனே

சோழ மன்னன் போர் புரிந்த இடத்திலே பல மதயானைகளும், காட்டுக் கோழிகளையும், கர்ஜனை செய்யும் சிங்கங்களையும் கொண்டிருந்தது


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

My Books

Ancient Wisdom Explored - Part 1  

Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5  


Ancient Wisdom Explored - Part 2  

Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6


#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #சித்திரக்கவி #முரசபந்தம் #தண்டியலங்காரம் #கவிதை #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Chithirakavi #Thandialangaram #murasabandham #kavidhai 


For enquiries/feedback: gnanathedal@outlook.com


ஞானத்தேடல் - Ep 78 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

………… கடிகமழ் கலிமாத்


வெட்சி


வெட்சி புனையும் வேளே போற்றி 

உயரகிரி கனக சபைக்கோர் அரசே


என்று கந்த சஷ்டிக் கவசத்தின் இறுதியில் வருகிறது.


செய்யன்....கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்" 


என்று திருமுருகாற்றுப் படை கூறுகின்றது.


வட்கர் போகிய வளரிளம் போந்தை

உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு

வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்

சுரியிரும் பித்தை பொலியச் சூடி


என்று புறநானூறு சொல்கிறது.


இதல முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி

என்று உவமை காட்டிப் பேசுகிறது.


ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்

என்று பரிபாடல் சுட்டுகிறது.


திருமுருகாற்றுப்படை,


செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு

(வரி 21 )என்று குறிப்பிடுகிறது.


எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார்ப், புரிமலர்த்

துழாஅய் மேவல் மார்பினோய்” 

என்று பரிபாடல்  (13 : 59 – 60) பாடுகிறது.


வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற்

செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு

மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ

போர்க்குத் துடியொடு புக்கு

- பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு, 1236


செங்கோடுவேரி


வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியன மணங்கமழும் வேர்கள். இவற்றை வேரி என்பர். இவைபோன்று மனக்கும் வேர்கொண்ட ஒரு மரத்தின் பூ, "கோடு வேரி"எனப்பட்டது.  i


சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,

மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,

பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று

இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி

- சிலப்பதிகாரம்


செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்


காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ் வேரி மலர்க் கோதையாள்

- சிலப்பதிகாரம்


My Books


Ancient Wisdom Explored - Part 1  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5  


Ancient Wisdom Explored - Part 2  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6


#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #செங்கொடுவேரி #வெட்சி #கபிலர் #திருமுருகாற்றுப்படை #பரிபாடல்  #சிலப்பதிகாரம்  #Knowledge #Quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #nakkeerar #flowers #vetchi #senkoduveri #paripadal #silappathikaram #thirumurugatruppadai #purathiratu #nature


For enquiries/feedback: gnanathedal@outlook.com

ஞானத்தேடல் - Ep 79 - வெற்றியின் ரகசியம் - (Gnanathedal)

$
0
0

 

வெற்றியின் ரகசியம்


மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி

அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்.

- நீதிநெறி விளக்கம் (52)


தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. (467)


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (505)


கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு. (578)


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். (619)


ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல் (818)


கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல். (1021)


My Books


Ancient Wisdom Explored - Part 1  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5  


Ancient Wisdom Explored - Part 2  


Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii

Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6


#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம்  #நீதிநெறிவிளக்கம் #குமரகுருபரர் #திருக்குறள் #திருவள்ளுவர் #வெற்றி #வெற்றிக்குவழி  #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Needhinerivilakkam #kumaraguruparar #thirukkural #thiruvalluvar #success #successmotivation #successmindset 


For enquiries/feedback: gnanathedal@outlook.com

ஞானத்தேடல் - Ep 80 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மாம்பூ - (Gnanathedal)

$
0
0


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


கடிகமழ்கலிமா, கவிழ்இணர்மா 

- குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.


மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் - திருமுருகாற்றுப்படை


நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை

ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று

கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்

கடுங்கண் யானை கானம் நீந்தி

இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி            5

**பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன**

**நன் மா மேனி** பசப்ப

நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே

- குறுந்தொகை


மாவின்  தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து

ஈர்க்கி னரும்பிய திதலையர் – மதுரைக்காஞ்சி


பலவின் சுளையும்

வேறுபடக் கவினிய தேமாங் கனியும் 

– மதுரைக்காஞ்சி


வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38


மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே

கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்

பாவிடை யாடுகுழல் போற் கரந்து பரந்ததுள்ளம்

ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


காமர் மாஅத்துத் தாதலர் பூவின் வண்டு வீழ்பு அயருங் கானல்   - குறுந்தொகை


கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ

மயங்குமழைத் துவலையின் தாஅம் ஊரன்

- அகநானூறு

ஞானத்தேடல் - Ep 81 - சித்திரக்கவி - திரிபங்கி - (Gnanathedal)

$
0
0


 சித்திரக்கவி - திரிபங்கி 


ஆதரந் தீரன்னை போலினியாய் அம்பிகா பதியே

மாதுபங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண்முடியாய்

ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்

ஓதுமொன் றே!உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே


தாயைப் போல் இனிமை செய்பவனே! அம்பி கைக்குத் தலைவனே! உமையை இடப்பாகத்தில் உடையவளே! கையில் நெருப்பைத் தாங்கிய சடைக் கடவுளே! மணந்தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனே! குற்றத்திலிருந்து நீங்கி தின்ன ருள் பெற்று வாழ்ந்தவர்களுடைய துன்பஞ் சூழ்ந்த இருவினை களைத் தீர்க்கின்ற எம்முடைய கடவுளே! வீட்டின்பத்தையுடைய வர்கள் போற்றுகின்ற ஒப்பற்ற பொருளே! எண்ணுபவர்களுக்கு அமுதத்தைப் போன்றவனே! தேவர்களுக்குத் தலைவனே! என்னுடைய அவாவைத் தீர்ப்பாயாக!


ஆத ரந்தீர்

மாது பங்கா!

ஏத முய்ந்தார்

ஓது மொன்றே


உய்ந்தவர் போற்றும் மாதொரு பங்கன்


அன்னைபோ லினியாய்

வன்னிசேர் சடையாய்

இன்னல்சூழ் வினைதீர்

உன்னுவா ரமுதே


தாயை போல் அன்பு கொண்டவன். வன்னி மரத்தின் மலர்களை சூடுபவன். தீவினைகளையும் இடர்களையும் தீர்ப்பவன். போற்றுவார்க்கு அமுதை போன்றவன்.


அம்பிகா பதியே

வம்புநீண் முடியாய்

எம்பிரா னினியார்

உம்பர்நா யகனே


அம்பிகையின் தலைவன். நீண்ட சடைமுடி உடையவன். உயர்ந்தோரின் கடவல், தேவர்களின் தலைவன்


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal)

$
0
0


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை, குறுநறுங்கண்ணி, உந்தூழ், வேரல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு



உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்


குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,



மணிச்சிகை


இதனைச் செம்மணிப்பூ என்கிறார் நச்சினார்க்கினியர்


மணி உருவில், மணி(நீல) நிறத்தில் சிகை(தலைமுடி) போன்ற நார்களுடன் பூத்துக் கிடக்கும் பூ மணிப்பூ


குறுநறுங்கண்ணி


ஒரு குண்டுமணி'தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.


குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?


குன்றிமணி போல்வ செங்கண் – திருமுருகாற்றுப்படை


குன்றின் யன்ன கண்ண – அகநானூறு


புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து (277)


உந்தூழ்


உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே - குறு 239/6


முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் - அகம் 78/8


பாம்பு உமிழ் மணியின் தோன்றும்

முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே



இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு

ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை - மலைபடுகடாம்


‌ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை


வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

- குறுந்தொகை - 18


வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி

அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய

முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு

எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .

மலைபடுகடாம்


வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து...

ஆர முழுமுதல் உருட்டி வேரல்

பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு

விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த


பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும்

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்

மருந்து பிறிதில்லை, அவர் மணந்த மார்பே.

- குறுந்தொகை 68

ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)

$
0
0


 தமிழும் அறிவியலும் - 4

தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Tamil and Science - 1

Let's see about the details found in Tamil literature about science in this episode


References

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுவற நின்ற கலப்ப துணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்

தணிவற நின்றனன் சராசரந் தானே.

ஞானத்தேடல் - Ep 84 - அனுபவ ஞானம் - 1 - (Gnanathedal)

$
0
0

அனுபவ ஞானம் 


ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே


மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்

ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே

 


ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)

$
0
0


 பதார்த்த குண விளக்கம் 


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம்  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode


References


வைத்திய வித்வன்மணி சி.  கண்ணுசாமிப்  பிள்ளை அவர்கள்


- மூல, தாது, ஜீவ வர்க்கம்

- Binomial Nomenclature


பித்தகாரி - Cholagogue

விஷநாசகாரி - Antidote

தாதுக்ஷீணரோதி - Antiseptic

பூதிகந்தநாசினி - Disinfectant

சமனகாரி - Sedative

உற்சாககாரி - Stimulant

பலகாரி - Tonic

மலகாரி - Laxative

நித்திராகாரி - Hypnotic

கபஹரகாரி - Expectorant


- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்

- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு


அளத்தல்


60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)

8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)

6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)

4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)

8 ஆழாக்கு - 1 படி (~1.4L)

சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்


நிறுத்தல்.


4 நெல் எடை - 1 குன்றிமணி

4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)

32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)

40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)

10 விராகனெடை - 1 பலம் (40gm)


8 குன்றிமணி - 1 gm


வேறு.


1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)

3 தோலா - 1 பலம் (40gm)

8 பலம் - 1 சேர் (320gm)

5 சேர் - 1 வீசை (1600gm)

8 வீசை - 1 மணங்கு (12.8kg)

ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal)

$
0
0

 

அனுபவ ஞானம் 


நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

      நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

      பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

      சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்

      எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே


கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

     கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்

     ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

     பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்

     பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

ஞானத்தேடல் - Ep87- குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம் -(Gnanathedal)

$
0
0


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


சிறுபாணாற்றுப்படை


ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடியது.


கடை ஏழு வள்ளல்கள்


பேகன்


வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே

- புறநானூறு -- 141 (பரணர்)


பாரி


பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

 - புறநானூறு 134 (கபிலர்)


காரி


வாலுளைப் புரவியொடு வையக மருள

வீர நன்மொழி யிரவலர்க் கீந்த

வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்

கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்


ஆய் ஆண்டிரன்


இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

- புறநானூறு -- 134 (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)


அஞ்சி


கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல 

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த

வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே

லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது


நள்ளி


நட்டோ ருவப்ப நடைப்பரி கார 

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாட னள்ளியு நளிசினை


நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

'வரவுஎமர் மறந்தனர்; அது நீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

-  புறநானூறு 149 (வன்பரணர்)


ஓரி


நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக் 

குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

வோரிக் குதிரை யோரியு மெனவாங்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

- புறநானூறு -- 204 (கழைதின் யானையார்)


புறநானூறு - 158

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.

பாடப்பட்டோன் : குமணன்


முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,

அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்

பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்

கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,

மாரி ஈகை, மறப்போர் மலையனும்;

ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,

கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;

ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,

பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி

மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று

உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,

தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,

கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு

எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்

பாடி வருநரும் பிறருங் கூடி

இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்

உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,

ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,

முட்புற முதுகனி பெற்ற கடுவன்

துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,

அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!\

இசைமேந் தோன்றிய வண்மையொடு,

பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!


நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி - அகம்

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் - தேவா-சுந்:

தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் - தேவா-அப்

மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை - தேவா-சம்


யாப்பியல்

'நேர்நிரை'அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்'என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.

ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal)

$
0
0


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு

. . . .. . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


எறுழம்


பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்

பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்

கால் எறுழ் ஒள்வி தாஅய

முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.

- ஐங்குறுநூறு (308)


தெறுழ்வீ


கார்பெயல் தலைஇய காண்பின் காலைக்

களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப

- புறநா 119


வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்

நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ

தாஅம், தேரலர் கொல்லோ

- நற்றிணை 302 (மதுரை மருதன் இளநாகனார்)


கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்

தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன

சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று

கூர்ந்த பசலை யவட்கு

- கார் நாற்பது 25 (மதுரைக் கண்ணங்கூத்தனார்)

இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை


அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25)


சுள்ளி


சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை

அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி

இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை

உதணால் கடிந்தான் உளன்.

- திணைமாலை நூற்றைம்பது

சுள்ளி – மராமரப் பூ; ‘சுள்ளி’ என்ற சொல் தாவரங்களைச் சுட்டும் சொல்லாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘சுள்ளி’ என்ற சொல்லுக்கு நிகண்டுகள் அனிச்சம், நறவம், மராஅம், நாகம், ஞாழல், ஆச்சா போன்ற பல தாவரங்களைச் சுட்டுகின்றன. இச் சொல்லின் பொருள் மென்மை, கூர்மை, ஈரமற்று காய்ந்தது ஆகியவையாகும், ‘சுள்ளிவேலி’பற்றி இலக்கியமும், கல்வெட்டுகளும் கூறுகின்றன.


“வெண்பூஞ் சுள்ளி”, சுள்ளி வெண் போது சுரும்புணவிரித்து

பெருங்கதை

சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்

நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச்

சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு

முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான்.

‌- சீவக சிந்தாமணி


கூவிரம்


கூவிரம் என்றொரு பூ வந்துள்ளது. இதற்குக் கூவிரப் பூ” என்று நச்சர் பொருள் எழுதியுள்ளார். கூவிளம் போன்று கூ'என்னும் அடைமாழி பெற்றது இது. இலக்கியப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் இல்லை. 'வீரை என்றொரு பூ உண்டு. அஃதொரு பாலை நிலத்து மரப் பூ அதன் இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் காய் வாள் போன்று பட்டையாக நீண்டது. அதனால் அது "வாள்வீரம்’ எனப்பட்டது. அவரை வகையில் ஒரு கொடி வாள் போன்று


‌வரையன புன்னாகமும்,

கரையன சுரபுன்னையும்,

வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்

மனைமாமரம் வாள்வீரம்,

சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,

தாய தோன்றி தீயென மலரா,

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,

வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்

பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்

வயவர் அரி மலர்த் துறை என்கோ?

- பரிபாடல்

வடவனம்


வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம்.


வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர்.


ஆலமரம்

ஞானத்தேடல் - Ep89 - கொடுந்தமிழ் நாடு - (Gnanathedal)

$
0
0


 கொடுந்தமிழ் நாடு


இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

(தொல்.சொல், 397)


செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி


கொடுந்தமிழ் நாடு


கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.


"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,

பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய

சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிருநாட் டெண்"


என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க.


கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல் லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணந் துளுவம் குடகங் குன்றகம் என்பன குடபால் இருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும் ' (தொல், சொல், தெய்வச்சிலையார் உரை , பக். 218 and 219)


பன்னிரு நிலமாவன- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றமுகம் கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.


தமிழ்சூழ் பதினேழ் நிலம்


சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக்,குடகம்

கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,

கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே


கொடுந்தமிழ் நாடு


தற்காலப் பெயர்


தென்பாண்டி நாடு - திருநெல்வேலிப் பகுதி

குட்ட நாடு - கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்

குட நாடு - வடமலபார்

கற்கா நாடு - குடகு நாடு

வேணாடு - திருவாங்கூரின் தென்பகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) - வேளிர் நாடு ⇒ வேள் நாடு ⇒ வேணாடு,  வேழ நாடு ⇒ வேணாடு.

பூழி நாடு - கோழிக்கோடு

பன்றி நாடு - பழனி மலை சூழ்ந்த பகுதி

அருவா நாடு -  அருவாளர் நாடு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு

அருவா வடதலை நாடு - சித்தூர், நெல்லூர்

சீத நாடு - கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள், நீலகிரி

மலையமான் நாடு - திருக்கோவிலூர் சூழ்ந்த பகுதி

புனல் நாடு - சோழ நாடு

Viewing all 170 articles
Browse latest View live