Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all 170 articles
Browse latest View live

ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal)

$
0
0

 


நோய் தீர்க்கும் பாடல்கள் - 1

ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got sick and sang 10 Pasurams to get cured. It is believed that those who sing these pasurams get their illness cured. Let's explore about it in this episode References 1. நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 2. சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறிஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடிஒளித்தார் முத்துத் திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன்அடியேன் பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 3. வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 9 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 10 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே.


ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal)

$
0
0

 


பதார்த்த குண சிந்தாமணி

தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Theraiyar has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References சுட்ட நீர் நெஞ்செரிப்பு நெற்றிவவி நீங்காப் புளியேப்பம் வஞ்சமுற வந்த வயிற்றினோய் விஞ்சியே வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர் ஆழாக்குட் கொள்ளவறும். கால்கூறு, அரைக்கூறு, காய்ந்த வெந்நீரின் குணம் காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போ மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரால் - மேற்கூறும் வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு ரோகம்போ மோடி யொளித்து, முக்காற்கூறு காய்ந்த வெந்நீரின் குணம் முப்பங்கறக் காய்ந்த முத்தவெந்நீ ரால்வாதஞ் செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெங் கைப்பலநோய் வாதபித்த மையமிவை மாறுஞ் சுரிகுழலே பூதலத்து நாளும்புகல் விளாங்கனி எப்போது மெய்க்கிதமா மீளையிருமல்‌ கபமும்‌ வெப்பாகுந்‌ தாகமும்போ மெய்ப்பசியா மிப்புவியி லென்றாகிலும்‌ கனிமே லிச்சைவைத்‌துத்‌ தின்னவெண்ணித்‌ தின்றால்‌ விளாங்கனியை தின்‌. மணத்தக்காளி காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபிணியோர்க் காகும் மணத்தக்கா ளிக்குள்ள வாறு. கிழங்கான் மீன் பத்தியத்திற் கேற்ற பருங்கிழங்கான் மீன்அருந்த உற்ற பிணியனைத்தும் ஒடுங்காண்-மெத்தப் பசியெழும்புஞ் சேர்ந்த பழமலமுஞ் சாறும் முசியா துடல்வளரு முன்


ஞானத்தேடல் - Ep 52 - 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) - (Gnanathedal)

$
0
0


18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy)

18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...

Awareness of Privacy in the 18th century Tamil Literature Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode References அறப்பளீசுர சதகம் சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதில் கிரகச் சார முந் தின்றுவரு மௌடதமு மேலான தேசிகன் செப்பிய மகா மந்த்ரமும் புன்மையவ மானமுந் தானமும் பைம்பொனணி புனையுமட வார் கலவியும் புகழ்மேவு மானமு மிவையொன்ப துந்தமது புந்திக்கு ளேவைப் பதே தன்மமென் றுரைசெய்யவ ரொன்னார் கருத்தையுந் தன்பிணி யையும் பசியையுந் தான்செய்த பாவமு மிவையெலாம் வேறொருவர் தஞ்செவியில் வைப்ப தியல்பாம் அன்மருவு கண்டனே மூன்றுலகு மீன் றவுமை அன்பனே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. (39) சொல்லக்கூடாதது - பிறந்த வருடம் - செல்வம் - ஜாதகம் - உண்ணும் மருந்து - குரு உபதேசித்த மந்திரமும் - அவமானம் - தானம் - பெண்களிடம் இருக்கும் காதல் நெருக்கம் - புகழ் தரும் மானம் சொல்ல வேண்டியது - எதிரிகள் கருத்து - தன் பிணி பசி - தான் செய்த பாவம்

ஞானத்தேடல் - Ep 53 - குமரேச சதகம் - (Gnanathedal)

$
0
0

 


குமரேச சதகம் குமரமலை, குமரேச சதகம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Kumaresa Sadhagam Let's explore about Kumara Malai and Kumaresa Sadhagam in this episode References குமரேச சதகம் முருகன் திருவிளையாடல் பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும், புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும் பாதனைச் சிறையில் வைத்தும், தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும் செகுக்கமுடி யாஅசுரனைத் தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு செய்தமரர் சிறைதவிர்த்தும், நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில் நினைக்குமுன் வந்துதவியும், நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை நிகரான தெய்வமுண்டோ மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி மார்பனே! வள்ளிகணவா! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (1) பலர்க்கும் பயன்படுவன கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய கோவுமூ ருணியின் நீரும் கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும், குடியாளர் விவசாயமும், கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற் கனிபல பழுத்தமரமும், கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும் காவேரி போலூற்றமும், விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும், வீசும்மா ருதசீதமும், விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும் வெகுசனர்க்கு பகாரமாம், வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப மார்பனே வடிவேலவா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே. (16)

ஞானத்தேடல் - Ep 54 - புலவரை துரத்திய புலி - (Gnanathedal)

$
0
0


புலவரை துரத்திய புலி

புலவரை துரத்திய புலி பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Tiger that chased a Poet


Let's see about an interesting story of a tiger that chased a poet in this episode


References


சங்கர சிந்தாமணிப் புலவர்


பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு 

வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து 

மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற 

தையாமென் போடை யதிபா புலவர்க் கருணிதியே


- பங்காரு திருமலை நாயக்கர் (1840-1862)

- திருமலை போடைய காமராச பாண்டியர் (1862 - 1888)


ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)

$
0
0


 சித்திர கவி - கோமூத்திரி பந்தம்


சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


Chithira Kavi - Komoothri Bandham


Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode


References


தண்டியலங்காரம் - Thandialangaaram


பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவி லாயிழை பூவணி காலமே


தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்

இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.

மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து

கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்

இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த

அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்

உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்

தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.


Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png


Also see - https://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

ஞானத்தேடல் - Ep 56 - கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - (Gnanathedal)

$
0
0

 

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பற்றி ஓர் உண்மை கதையை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Noble are always Noble even in adversity


Let's see about an interesting true story where a man who lived up to the old saying "The noble are always noble even in adversity", in this episode


References


அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.


மிதலைப்பட்டி - அது சிவகங்கை ஸம்ஸ்தானத்தைச்‌ சார்ந்தது.


மணிமேகலையை அவள்‌ அணிந்துகொள்ளும்‌ வண்ணம்‌ செப்பஞ்‌ செய்துகொடுத்ததும்‌ மிதிலைப்பட்டிப்‌ பிரதியே!


அழகிய சிற்றம்பலக்‌ கவிராயர்‌  


பல அரிய தமிழ்ச்‌ சுவடிகள்‌ பலநாற்றாண்டுகளாகச்‌ சேகரித்து அவர்‌ வீட்டிலே பாதுகாக்கப்‌ பெற்றிருந்தன


தாரமங்கலம்‌ கோயில்‌  திருப்பணிகள்‌ செய்த கட்டியப்ப முதலியார்‌

வெங்‌களப்ப நாயக்கர் 

இராமநாதபுரம்‌ சேதுபதிகள்  

மருங்காபுரி ஜமீன்‌தார் 

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)

$
0
0

 

வான சாஸ்திரம் - 1


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 1


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


நட்சத்திரங்கள்


- விடிவெள்ளி -Venus

- ஆமைவெள்ளி - Orion's Belt

- கூட்டுவெள்ளி - Pleiades cluster

- கட்டில்கால் - Orion Constellation

- செட்டிக் குடிகெடுத்தான்

- கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster

- திருவாதிரை - Betelgeuse


ஆண்டாள் பாசுரம்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால்

      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்


ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal)

$
0
0

 

சித்திரக்கவி - காதைகரப்பு


தாயேயா நோவவா வீரு வெமதுநீ

பின்னை  வெருவா வருவதொ ரத்தப

வெம்புகல் வேறிருத்தி  வைத்த சினிச் சைகவர்

தாவா வருங்கலநீ யே


எங்கள் தாயாக இருக்கும் இறைவா. எங்கள் துயர் தீர். நீ எங்கள் சார்பாக பாதுகாவலாக உள்ளாய், இருப்பினும் அச்சமாகவும் தோன்றுகிறாய். அந்த அச்சமும் மறைந்து பின்னர் புகலிடம் அளித்து அமைதி தருவாய். எங்களுக்கு கேடில்லாத பாதுகாப்பு அரனாய் இருக்கிறாய் ஈசனே.  


கருவார் கச்சித்

திருவே கம்பத்

தொருவா வென்நீ 

மருவா நோயே


மனதில் கச்சித் திருவேகம்பத்துறையும் கச்சியப்பரை நினைத்தால் மீண்டும் கருவில் புகுந்து பிறப்பெடுக்கும் நோய் நம்மை சேராது.


ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal)

$
0
0

 

வான சாஸ்திரம் - 2


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 2


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


புறநானூறு


பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13),


வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் (21)


மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல (25)


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (60)


மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (117)


வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (122)


வானம் மீன்பல பூப்பின், ஆனாது (125)


பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் (270)


மாரி வானத்து மீன் நாப்பண் (396)


பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

பாடியவர்: கூடலூர்கிழார்



ஆடிய லழற்குட்டத்

தாரிரு ளரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காய்ப்

பங்குனியுய ரழுவத்துத் 


தலைநாண்மீ னிலைதிரிய

நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்

தொன்னாண்மீன் றுறைபடியப்

பாசிச் செல்லா தூசி முன்னா

தளக்கர்த்திணை விளக்காகக்


கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்

பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்

நோயில னாயி னன்றுமற் றில்லென


அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

மைந்துடை யானை கைவைத் துறங்கவும்

திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்

காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்


காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்

மேலோ ருலக மெய்தின னாகலின்

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்

தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்


களந்து கொடை யறியா வீகை

மணிவரை யன்ன மாஅ யோனே.


ஞானத்தேடல் - Ep 60 - சித்திரக்கவி - ஏகநாகபந்தம் - (Gnanathedal)

$
0
0



சித்திரக்கவி - ஏகநாகபந்தம்


வந்தறந் தோய்ந்தி வையமுயத் தந்தநம் வாமிசுதன் 

தந்திரஞ்சேர் மதமார்வார் முன் சாய்ந்தவபோதனுசன் 

சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய் செந்தில் 

வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சிதசிவ


இவ்வுலக முக்திக்காக, முருகப் பெருமான் அனைத்து உன்னத குணங்களுடனும் வந்தார். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர் காலில் விழுவார்கள். இவரை வழிபடும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தமிழ் மக்களாகிய நமக்கு அவரைப் பிறப்பித்த சிவபெருமானைப் போற்றுகிறோம்


என்ராமச் சந்திரன் இன்ப மலிசத்தி 

என்னவே தன்பேர்சீர் மன்னவே - வன்புவியிற் 

பல்லூழி வாழிகவி யேற்றல்மா வாணியவள் 

நல்கல்பூ வாகையருள் நன்கு.


என் ராமச்சந்திரன் என்றும் இன்பமிக்க செல்லப் பெயர் சத்தி யென்றும் யாவரும் கூறக்கூடிய தனது பேரும் புகழும் நிலைபெற, வலிமையான பூமியின் கண்ணே கவிகளையேற்றலால், இலக்குமி யும் சரசுவதியும் அழகிய வெற்றிமாலையும் நன்றாகக் கொடுக்க அருள் தங்கித் தலைவன் பல்லூழி வாழ்க,


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html


ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

$
0
0

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

ஞானத்தேடல் - Ep 62 - சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் - (Gnanathedal)

$
0
0

 

சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலதா யும்பர் தெருளின் மருவாசீர்ச் சீரே பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு குன்றே தெருள வருள் அறத்தினது அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள் அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழை யுடையாய்! குற்றமில்லாத ஏகரூபத்தை யுடையால்! உமையோடு பொருந்தின மலை போல்வாய்! யாங்கள் தெளிய அறிவை அருள் வாயாக. மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதித் திருநிலா வானஞ் சுருங்கு மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி அடைந்தவருள்ளத்தே கெடாத விளக்கமாயுள்ளாய்! நஞ்சின்கணுண்டாகிய பெருகிய நிற நிறைந்து பொருந்தின திருமிடற்றையுடைய பெரிய சோதியாயுள்ளாய்! அழகிய மதியை யுடைய ஆகாயமானது சிறுகப் பெருகிய வொளியே திருமேனியா யுள்ளாய். எனதுள்ளம் நினதடியை மறக்கு மெல்லையை யொழிப் பாயாக. மொத்தம் - 118 சுருங்கியது - 96 தலை - 2 வால் - 9 வயிறு - 10 - 5 x 2 மூலைகளில் - 20 - 5 x 4 சந்தி - 22 மீதம் - 33 கலிவிருத்தம் சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே வஞ்சித்துறை சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே `சேயாசேயா` - சேயவனே சேயவனே `தே` - கடவுளே. `தேய் ஆசு` - (எனது) சிறுமையைக் கெடு, `ஆசு ஏமா` - சிறுமைக்கு நமளாயுள்ளானே `யாமாயா` - (சத்திரூபமாகச் சுருங்கியிருந்து) வியக்திருப மாக விரியும் மாய மாயைக் கதிபதியே, `வா`- வந்தருள்வாயாக. `வாயா மாயாமா` - (உயிர்களோடத்து லிதமாயிருந்துமவைகட்குக்) கிட்டாத மகா சிவ ராத்திரியத்தனே. `வாயா` - உண்மைப்பாடுடையானே, `மாவாயா` - சிறந்த வாக்குடையானே, `மாயா` - மாய வித்தைகளுடையானே `சேமா`- சேமமுடையானே. `சேய்` - இளநலமுடையானே. `ஓயாநேயா` - (அன்பர் மாட்டு) ஒழியா நேயமுடையானே. `ஓயாய் ஏது` - (என் கண்ணதாய) ஏதெனுங் குற்றத்தை யொழித்தருள், `ஆள்` -ஆண்டருள்.

ஞானத்தேடல் - Ep 63 - சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் - (Gnanathedal)

$
0
0

 

சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் திருவாவடுதுறையில் பிள்ளையார் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டி விண்ணப்பித்தார். தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடிய மகனின் பக்தியை மெச்சி இறைவனும் உலவாக்கிழி (குறைவற்ற பொற்கிழி) ஒன்றை அருளினார். அந்தப் பொற்கிழியை நன்றியுடன் பெற்றுக் கொண்ட சிவபாத இருதயர் தமது யாகங்களை இனிதே நடத்தினார். இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

ஞானத்தேடல் - Ep 64 - சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - (Gnanathedal)

$
0
0


 சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம்


- சதுர் நாகபந்தம் 


தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங 

னறித லுலகியலை – முன்னுவந்துன்னை யறிக முதல்.


நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ

நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை


ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு

தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ


உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண்

மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல்


மேலா பகவா குகனே வெகுகன 

வேலா வவாவை வெலுகவே - கோலா 

கலாப சுகனேகா வாயே கதிசேர் 

கலாப மயில்வா கனா!


- அஷ்ட நாகபந்தம் 


சீதரா பாற்கரா சீல நிறையாளா 

சேது பதியான சீரைய- போதப் 

பகவனக லாதமா பாங்கினக நேய 

சகல பயனுந்தா தா.



ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 (ஆண்டாள் மழை வானியல்) - (Gnanathedal)

$
0
0


தமிழும் அறிவியலும் - 1


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 1


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


ஆண்டாள் பாசுரம்


ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் 

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


ஞானத்தேடல் - Ep 66 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் காந்தள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Kanthal also known as Flame Lilly


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70


விரிமல ராவிரை வேரல் சூரல்

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி

குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்

தில்லை பாலை கல்லிவர் முல்லை

குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்

வாழை வள்ளி நீணறு நெய்த

றாழை தளவ முட்டாட் டாமரை       80


ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி

சேடல் செம்மல் சிறுசெங் குரலி

கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை

யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி

வஞ்சி பித்திகம் சிந் துவாரம்

தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி       90


நந்தி நறவ நறும்புன் னாகம்

பாரம் பீரம் பைங்குருக் கத்தி

யாரங் காழ்வை கடியிரும் புன்னை

நரந்த நாக நள்ளிரு ணாறி

மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

மாலங் குடைய மலிவன மறுகி

வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்

வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்


1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


காந்தள் அரும்பகை என்று, கத வேழம் 

ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி,

பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நன்னாடன்

காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 

- நூல்: கைந்நிலை (புலவர்:  புல்லங்காடனார்)


காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது

வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்

தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட

கடனறி மாக்கள் போல இடன்விட்

டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்

நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை

யான்றனக் குரைத்தனெ னாகத்

தானா ணினனிஃ தாகா வாறே. 

- நூல்: குறுந்தொகை (புலவர்:  கருவூர்க்கதப் பிள்ளை)


- கைபோல் பூத்த கமழ் குலைக்காந்தள்

- செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்


மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப் 

பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால் 

காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே 

வேர்த்தளைக் காணென்றான் வேந்து” 

- நூல்: நளவெண்பா (புலவர்:  புகழேந்திப் புலவர்)


சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள் 

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் 

- நூல்: திருமுருகாற்றுப்படை (புலவர்: நக்கீரனார்)

ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal)

$
0
0


 சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம்

மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே

மேருவை வில்லாக கொள்பவனும். ஆலகால நஞ்சை உணவாக உந்தவனும். அவன் அடியார்களிடம் விளையாடும் நண்பனும் ஆன ஈசன் திருவடிகளை வணங்குவீர்

மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோத சுரரைநீ தீதகல
மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த்
தாயே யலகில்லாத தவ

போதி மரத்தடியில் ஆழ்நிலை தியானத்தில் அருள் தருவாய் இறைவா. நின் திருவடி போற்றும் அன்பர் தம்மை அசுரரென வருத்தும் தீவினை களைவாய். மனதின் இருள்நீக்கி ஞானம் அருள்வாய். தாயைப் போல் அன்பு செலுத்தும் நீ அளவிடறக்கரியவன்

ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 2 (திருமூலர்) - (Gnanathedal)

$
0
0

 

தமிழும் அறிவியலும் - 2


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 2


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


திருமூலர் சொல்லும் செல் அளவு


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிர மாயினால்

ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.


நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே

ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் ஆம்பல், குவளை பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Aambal and Kuvalai


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70


விரிமல ராவிரை வேரல் சூரல்

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி

குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்

தில்லை பாலை கல்லிவர் முல்லை

குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்

வாழை வள்ளி நீணறு நெய்த

றாழை தளவ முட்டாட் டாமரை       80


ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி

சேடல் செம்மல் சிறுசெங் குரலி

கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை

யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி

வஞ்சி பித்திகம் சிந் துவாரம்

தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி       90


நந்தி நறவ நறும்புன் னாகம்

பாரம் பீரம் பைங்குருக் கத்தி

யாரங் காழ்வை கடியிரும் புன்னை

நரந்த நாக நள்ளிரு ணாறி

மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

மாலங் குடைய மலிவன மறுகி

வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்

வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்


1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்


மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர் - கலித்தொகை 


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங்குறுநூறு


கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற


அள்ளற் பழனத்து அரக்காம்பல்  வாய்நெகிழ

வெள்ளம் தீப்பட்டதென வெருவி - புள்ளினம்

தன் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்     

- முத்தொள்ளாயிரம்


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம் 


ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - குறுந்தொகை


கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை - அகநானூறு

குவளை யுண்கண் இவளும் நம்மொடு  வரூஉம்  - அகநானூறு


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் ……

- திருவெம்பாவை

Viewing all 170 articles
Browse latest View live