Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all 170 articles
Browse latest View live

ஞானத்தேடல் - Ep90 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை - (Gnanathedal)

$
0
0


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


வாகை


பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர். 


“வெற்றி வாகை சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.


‌வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்; வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி; அது வளைத்தல் ஆகும் உழிஞை-அதிரப்பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம்"


1. நிரை கவர்தல் - வெட்சி

2. நிரை மீட்டல் - கரந்தை

3. மண் கவர்தல் - வஞ்சி

4. மண் காத்தல் - காஞ்சி

5. மதில் காத்தல் - நொச்சி

6. மதில் வளைத்தல் - உழிஞை

7. போரிடல் - தும்பை

8. போரில் வெற்றி பெறுதல் - வாகை


அவை சொல்லானும் பாட்டானும் கூத்தானும் மல்லானும் சூதானும் பிறவற்றானும் வேறலாம்” -என வெற்றியைக் கொள்ளும்போர்களைக் குறித்தார். 


கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் வெல்லுநர் அணிவது வாகை யாகும்”. -  பிங்கல நிகண்டு 


மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10


மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை


வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.


மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்

குமரி வாகைக் கோலுடை நறுவீ

மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்

கான நீளிடைத் தானு நம்மொடு

ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்

நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.

- குறுந்தொகை - 347


அத்த வாகை அமலை வால் நெற்று,

அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்

கோடை தூக்கும் கானம்

செல்வாம் தோழி! நல்கினர் நமரே.

- குறுந்தொகை 369

- குடவாயிற் கீரத்தனார்

வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை, அருஞ் சுரம்''என்ப நம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே.

- குறுந்தொகை – 39

- ஔவையார்

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15


தார் புரிந்தன்ன வாளுடை விழவின்

போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த

கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,

பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை

- பதிற்றுப்பத்து


வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை


சூடா வாகை பறந்தலை ஆடு பெற - அகம் 125/19


வாகை என்னும் ஊர் சங்ககால எயினன், நன்னன் ஆகியோர் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்


புகழா வாகை பூவின் அன்ன


வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110


புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)


வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்


கருவாகை


மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,

பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்

தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்

தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,

தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

- அகநானூறு (136)


ஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal)

$
0
0


அனுபவ ஞானம் 


கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்

விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்

இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்

அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா.

நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்

தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்

நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்

குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்

சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்

அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்

துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்

தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே

ஞானத்தேடல் - Ep 92 - இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு - (Gnanathedal)

$
0
0

 

இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு


புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்

தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று

ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்

சோரார் உணர்வுடை யார்.

புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

ஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal)

$
0
0


 அனுபவ ஞானம் 


அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ

கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்

நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?

பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று

தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார்

மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில்

பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே!


திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி

இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்

இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே

ஞானத்தேடல் - Ep94 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை - (Gnanathedal)

$
0
0


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குடசம், எருவை 

தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Flowers in Kurinji Paatu

Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji

References

குறிஞ்சிப் பாட்டு

‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

குடசம்

.குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
- சிலப்பதிகாரம் 

கரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு

வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும்
காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப்
பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம்
இங்குக் குடசப் பாலைக்கே”
- அகத்தியர் குணபாடம்

திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை

எருவை

வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் . . . .[219 - 224]
மலைபடுகடாம்

கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை
எருவை கோப்ப எழில் அணி திருவில்
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்
கூனி வளைத்த சுனை
- பரிபாடல்

எருவை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘பஞ்சாய்க்கோரை’ என்றும் ‘கொறுக்கச்சியுமாம்’ என்றும் உரை கண்டார்

எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261
எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை - பரிபாடல் 19-77

பலவும் கூறுகவஃ தறியா தோரே
அருவி தந்த நாட்குர லெருவை
கயனா டியானை கவள மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.
-  குறுந்தொகை 170

கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269

ஐங்குறுநூறு -  வேழப் பத்து

மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே.

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே.

பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே

கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே.

மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.

ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.

புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
.புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.

இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.

ஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


செருவிளை, கருவிளை

யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகும்.


செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர்.


‌செருவிளை

செரு = வயல்

வயலில் விளையும் மலர்


கருவிளை

வயல் அல்லாத மேட்டில் பூக்கும் மலர்


கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


இலக்கியங்களில் கருவிளை


"மணி கண்டன்ன மா நிறக் கருவிளை"

- நற்றிணைப் (221 : 1) 


"கருவிளை முரணிய தண்புதல் பகன்றை" 

- அகநானூறு (255 : 11) 


"நீலப்பைம்போது உளரி, புதல பீலி ஒண்பொறிக் கருவிளை" 

- குறுந்தொகை  (110 : 3-4) 


"காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணின் கருவிளை மலர”

- அகநானூறு (294 : 4-5)  


"கண்ணெனக் கருவிளை மலர"

- ஐங்குறுநூறு (464 : 1) 


இதன் இலை, வேர், மற்றும் விதை முதலியவை மருத்துவக் குணம் கொண்டவை. இது சிறுநீர் பெருக்கும்; குடற்பூச்சிகளைக் கொல்லும்; வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்படுகிறது


பயினி


சிறு காரோடன் பயினொடு சேர்த்திய

கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்

மறந்தனர்கொல்லோ தோழி

- அகநானூறு (356 : 9) 


"பயில்பூம் பயினி"

- பெருங்கதை  சொற்றொடரைப் பார்த்தால், பயினிமரத்தில் பூக்கள்அடர்ந்திருக்கும் என அறியலாம்.

வானி


இளஞ்சேரல் இரும்பொறை, 

"சாந்துவரு வானி நீரினும்,தீம்தண் சாயலன்" 


புனல்பாய் மகளி ராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்

சாந்து வருவானி நீரினும்

தீந்தண் சாயலன் மன்ற தானே


புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு

வருநர் வரையாச் செழும்பல் தாரம்

கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப


- பதிற்றுப்பத்து 

பெருங்குன்றூர் கிழார்

ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)

$
0
0

 

பதார்த்த சூடாமணி


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Yaazhpaanam Irupaalai Chettiar has written a text call Padhartha Soodamani. Let's explore it in this episode.


References


எள்ளெண்ணெய்


இவ்வெண்ணெய் காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம்

கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ

டெவ்வமார் கிருமி போக்கு மெழிலுங்கண் ணொளியு முண்டாம்

செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே.


அறைக்கீரை, சிறுகீரை


அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல்

சுறுக்கதாய் நீக்குமென்ப சொல்லுபத் தியத்திற் காகும்

வெறுப்பிலா சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில்

பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே.


பொன்னாங்காணி


அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்

முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம்

குதியினில் வாத மோடு கொடியபீ விகையும் போகும்

மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்.


மாம்பிஞ்சு -பழம் - காய் - பூ -வித்து


வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார் கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்.


சிற்றரத்தை


கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குனரத்தினைச் சொல்வன் கேண்மோ

ஊறுசெய் சன்னி தோஷ் கரமுறு மூன்று தோஷம்

மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு

தேறுபீ னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றானும்.


திப்பிலி


திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம்

சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம்

குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம்

பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)

$
0
0


அனுபவ ஞானம் 


வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்

தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க

ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?

செல்வம் வந்துற்ற போது தெய்வமும்

      சிறிது பேணார்

சொல்வதை அறிந்து சொல்லார்

      சுற்றமும் துணையும் பேணார்

வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை

      வலிதென்று எண்ணார்

வல்வினை விளைவும் பாரார் மண்ணின்

      மேல் வாழும் மாந்தர்.

ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்

ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார்

ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்

பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார்



ஞானத்தேடல் - Ep 98 - கல்வியின் மகத்துவம் - (Power of Education)

$
0
0


 கல்வி


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர் (393)


கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு (397)


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. (398)


பாடை ஏறினும் ஏடது கைவிடேல்


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு  (396)


கண்டதை கற்க பண்டிதர் ஆவார்


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (391)


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!

நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!

அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்!

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  குரவம், கோங்கம், இலவம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


குரவம்

முருகனுக்கு உகந்த மரம்.

இது குரா, குரவு, குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு (திருவிடைக்கழி)

இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.


சோதியே சுடரே சூழொளி விளக்கே

சுரிகுழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்

பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்

நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே

திருவாசகம்-அருட்பத்து


பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி,

குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே?


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி

யிருக்கு வேதனு மிமையவர் பரவிய

திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


“இணைய இவை முன்றும்‌ ஒரு முக்கூட்டு மலர்களாகின்றன (பாலை). இவை போன்று முக்கூட்டான மலர்கள்‌ புன்னையும்‌ தாழையும்‌ ஞாழலும்‌ (நெய்தல்)


34 கோங்கம்

71 இலவம்


குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369)

புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப - கலித்தொகை, 33:12)"


“எரி பூ இலவத்து ஊழ்கழி பன் மலர்” – ஐங் 368/1 

“எரி உரு உறழ இலவம் மலர” – கலித்தொகை 33/10

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொருநராற்றுப்படை 27


“முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே” (நற்றிணை, 224 : 2-3)

“குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்” (அகநானூறு, 97 : 16-17)


பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும். அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3.


வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி


வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11


சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு 25-10


இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்,

சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் 10

பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன


“குரவம்‌ பாவை'எனப்‌ பெயர்‌ பெற்றது. பாவை மலர்‌.

‘நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை’ என்று ஐங்குறுநூறு (344 : 2-3).


முதிர்கோங்கின் முகையென பெருத்தநின் இளமுலை - கலித்தொகை

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் - குறுந்தொகை


தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப - திணை150:65/1

தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப

ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள்

மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற

வழி காட்டாய் ஈது என்று வந்து

கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இதுஎன்று.

கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின்

பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும்

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரிபாடல்

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ - ஐங்குறுநூறு 320


இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

இலை இல மலர்ந்த இலவமொடு - அகநானூறு


இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்

தலையலர்


கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:318

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே

முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2


அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா


அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழக

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... 


ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து

Ep100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி

$
0
0

 

ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி 


இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 


குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் 

- Mr. P. Soundara Rajan

- Mr. Soundararajan Kidambi

- Mr. P. Gopinath

- Dr. R. Rajesh

- Mr. R. G. Kannan

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)

$
0
0


 வேட்கைப் பத்து


மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;

கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய

பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;

நூலையோ தைங்குறு நூறு.


ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்"என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை"என்ற வேந்தன் ஆவார்.


"மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" 


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி


நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.


வாழி ஆதன்; வாழி அவினி!

நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

எனவேட் டோளே யாயே; யாமே,

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன். வாழ்க!

பாணனும் வாழ்க!'என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

விளைக வயலே; வருக இரவலர்!'

எனவேட் டோளே! யாயே; யாமே,

பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை யூரன் கேண்மை

வழிவழிச் சிறக்க!'எனவேட் டேமே!


வாழி ஆதன் வாழி அவினி!

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

என வேட்டோளே'யாயே; யாமே,

வித்திய உழவர் நெல்லொடு பெயரும்

பூக்கஞல் ஊரன் தன்மனை

வாழ்க்கை பொலிக'என வேட்டேமே!g


வாழி ஆதன்; வாழி அவினி!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

என வேட்டோளே யாயே; யாமே,

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்

கழனி யூரன் மார்பு

பழன மாகற்க'எனவேட் டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

என வேட்டோளே யாயே; யாமே

முதலைப் போத்து முழுமீன் ஆரும்

தண்துறை யூரன் தேர் எம்

முன்கடை நிற்க'என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

என வேட்டோளே, யாயே; யாமே,

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்துறை யூரன் வரைக

எந்தையும் கொடுக்க'என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும்

தன்துறை யூரன் தன்னூர்க்

கொண்டனன் செல்க'என வேட்டேமே!

 

வாழி ஆதன்; வாழி அவினி!

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

எனவேட் டோளே, யாயே; யாமே,

அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்

பூக்கஞல் ஊரன் சூள், இவண்

வாய்ப்பதாக என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

கயலார் நாரை போர்விற் சேக்கும்

தண்துறை யூரன் கேண்மை

அம்பல் ஆகற்க'என வேட் டேமே.


வாழி ஆதன்; வாழி அவினி!

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

என வேட் டோளே, யாயே; யாமே,

பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்

தண்துறை யூரன் தன்னொடு

கொண்டனன் செல்க'என வேட்டேமே.


ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

 

காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:

பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.  


எல்லோரும் பஜனைகளிலும், பூஜைகளிலும் சொல்லும் சில வாழ்த்துப் பாடல்களைப் படித்து, இந்த நன்னாளில், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” (எல்லோரும் வாழ்க! இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். 


வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

–கந்த புராணம் 


வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

—சம்பந்தர் தேவாரம்



மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம், 

பல்குக வளங்கள் எங்கும், பரவுக வரங்கள் இன்பம் 

நல்குக உயிர்கட்கெல்லாம், நான் மறைச் சைவம் ஓங்கி, 

புல்குக உலகம் எல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க! 

—பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

சேரா தியல்வது நாடு 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

விளைக வயலே; வருக இரவலர்!'

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

ஞானத்தேடல் - Ep 102 - அனுபவ ஞானம் - 6 - (Gnanathedal)

$
0
0


 அனுபவ ஞானம் 


கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி

  எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்

பொற்பூர உள்ளியினை விதைத்தாலும்

  அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்

சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக

  வருமெனவே சொல்லி னாலும்

நற்போதம் வாராது அங்கு அவர் குணமே

  மேலாக நடக்கும் தானே

வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்

வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்

புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று

நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.

தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்

அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்

சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர்

செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்.

ஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பசும்பிடி, வகுளம், காயா


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References


பசும்பிடி = பச்சிலைப் பூ

பசும்பிடி -  பச்சிலைமரம்.


கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்

 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

- பதிற்றுப்பத்து (81)


பசும்பிடி இளமுகிழ், நெகிழ்த்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்

- பரிபாடல்


பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்

- பரிபாடல் (19).


வகுளம் = மகிழம் பூ


மகிழம்பூ, இலஞ்சிப்பூ என மணம்கமழும் பெயர்கள்.


இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான (Mimusops Elengi)


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், 

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்

மலர்சொரி வகுளமு மயங்கிக்


முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி


கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய

வோடு தோ்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங்


குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன;


மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4).


காயாம் பூ


காடுகள் அழிந்தாலும் காயா அழியாது

காயா - காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா'என்றனர்.


காசாங்காடு, காசாங்குளம்‌ என் ஊர்ப்பெயர்களும் உள


திருமால் தெய்வத்தை காயாம்பூ மேனியன் என்பர்.


கருவிளை யொண்மலர்காள்  காயா மலர்காள்  திருமால் உருவொளி  காட்டுகின்றீர்  -நாச்சியார்  திருமொழி.


கருநனைக் காயாக் கணமயில் அவிழவும்,

- சிறுபாணாற்றுப்படை (165)


புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை

மென்மயில் எருத்தின்தோன்றும்”

- குறுந்தொகை (183)


பூவை -  நாகணவாய்ப் புள் (மைனா )


மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொன்னைப்போல் பொரு இல் மேனி,

     பூவைப் பூ வண்ணத்தான், இம்

மின்னைப்போல் இடையாளோடும் மேவும்

     மெய் உடையன் அல்லன்;

தன்னைப்போல் தகையோர் இல்லா,

     தளிரைப்போல் அடியினாளும்,

என்னைப்போல் இடையே வந்தாள்;

     இகழ்விப்பென் இவளை'என்னா,


பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;


இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை

பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்

பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே

தூதுரைத்து வாங்கும் தொடை


கடலோ? மழையோ? முழு நீலக்

   கல்லோ? காயா நறும் போதோ?

படர் பூங் குவளை நாள்மலரோ?

   நீலோற்பலமோ? பானலோ?-

இடர்சேர் மடவார் உயிர் உண்பது

   யாதோ?’ என்று தளர்வாள்முன்.

மடல் சேர் தாரான் நிறம் போலும்

   அந்தி மாலை வந்ததுவே!


வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்

பொலஞ் சுழிஎன்றலும் புன்மை; பூவொடு

நிலம் சுழித்துஎழு மணி உந்தி நேர், இனி,

இலஞ்சியும்போலும் ? வேறு உவமை யாண்டுஅரோ ?


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம்.


இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை கோட்டைச் சுவர், மதில், மகிழமரம் எனப்பல பொருள்படும்.


இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று

     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.


இலஞ்சி வேலவர் பிள்ளைத்தமிழ் -   கவிராச பண்டாரத்தையா. காலம் 19ம் நூற்றாண்டு.


மன்றுதொறாடல் உவந்தவர் கயிலையும்


மணிமாடக் கந்தமாதன பூதரமும் பொன் மயில்கள் மலர்க்கா விற்கார்கள்

துன்றுதொறாடல் உகந்த பரங்கிரிமலையும் தொலையாத சூரலை வாய்விடு சீரலைவாயும் தொழு திருவேரகமும்

நன்றுதொறாடலும் வந்தருள் செல்வி நயக்குந் திருஆவினன்குடியும் பழமுதிர்சோலைப் பழநாகமும் ஆகநெடும்

குன்றுதொறாடலும் வந்தருள் சேவக கொட்டுக சப்பாணி குறுமுனி பரவும் இலஞ்சிக் குருபர கொட்டுக சப்பாணி.


தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்

செங்கீரை  ஆடிஅருளே


கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக

கொட்டியருள் சப்பாணியே


செந்தமிழ் இலஞ்சிநகர் வந்த கந்தசுவாமி

சிறுதேர் உருட்டி அருளே

ஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,


சூரல்


வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,

ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்       

புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்

இரும் பிடி இரியும் சோலைப்

பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே - அகநானூறு 228


கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த

வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த- அகநானூறு 357



குரு மயிர்க்கடுவன்

சூரல்அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை

மாரி மொக்குள் புடைக்கும்”

என்று ஐங்குறுநூறு (275 : 1-3) பாடுகிறது.


சூரல்–பிரம்பு 

சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர்.


தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்

மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்

மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்

பூவைச்சேர் ஆவாரம் பூ

-அகத்தியர் குணவாகடம்


சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ

ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச

மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே

யாவாரை மூலியது.

- தேரையர் குண பாடம்


ஆவிரைக் கொன்றை நல்ல 

அழகிய , பூகம் , மத்தம் 

மேவிய மருதின் தோலும் 

விரைந்துடன் ஒக்கக் கூட்டிப் 

பூவினில் சிறந்த மாதே 

புதியதோர் தேனி லுண்ண 

காவிரி நீரும் வற்றிக் 

கடல்களும் , சுவறு , மன்றே . 

- மேகவாகடத்திரட்டு


சிறுபீளை: 


நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 

பொரடரி ரக்த கணம் போக்குங்காண் வாரிறுக்கும் 

பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 

யாமிது கற்பேதி யறி"


சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 

விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 

கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு

காட்டிற் கழன்றோடுங்காண்"


ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ


ஆவிரை

ஆவாரம்பூ 


பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பல்நூல் மாலை பனைபடு கலிமா”

- குறுந்தொகைப் பாடலால் (173)


பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18



சிறுபூளை


கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர

 

பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை

- அகப்பாடல்கள் (217, 297)  கூறுகின்றன.


நெடுங்குரல் பூளைப் பூவின்அன்ன, குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி 

- பெரும்பாணாற்றுப்படை


செந்நாய் எடுத்தலின், வளிமுனைப் பூளையின் 

ஒய்யென்று அலறிய,கெடுமான் இனநிரை

- அகப்பாடல் (199) சுட்டுகிறது. 


பூளை நீடிய வெருவரு பறந்தலை”⁠-புறநா. 23 : 20 


அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் 

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை

பூளை நீடிய வெருவரு பறந்தலை 20

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளி லத்த மாகிய காடே.



ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)

$
0
0

 

கம்பர் கட்டிய சுவர்


சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம்


கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம்


“தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை”


தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை


போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே.


மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


"இவ்வுலகில் மன்னவனாக இருப்பவள் நீ ஒருவன் தானோ வளமான நாடாக இருப்பதும் நின் சோணாடு மட்டுந்தானோ. உன்னை அறிந்ததன் பின்போ யாள் தமிழினைக் கற்றுணர்ந்தேன. குரங்கு தாவினால் அதனைத் தாங்காது போகும் மரக்கொய் யாதும் உண்டோ? இல்லையன்றே! அங்ஙனமே, யான் இங்கிருந்தும் அகன்றால், என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்தனும் உண்டாமோ?"என்பது பாடலின் பொருள்.


"அங்ஙனம் எவன்தான் ஆதரிக்கிறான் என்று பார்க்கலாம என்று குலோத்துங்கன் சீறினான். கம்பரின் சீற்றமும் அதனால் மிகுதியாயிற்று. தாம் இருப்பது சோழனின் அவை என்பதையும் அவர் மறந்தனர். அவன் ஆதரவில் தாம் இருந்ததையும் மறந்தனர். தம்மை அவமதித்த சோழனின் செயலே அவர்முன் நின்றது. கவியுள்ளம் பொங்கியது. தமிழால் நிறைந்த கம்பரின் நெஞ்ச திலே தணல் மூண்டது. இனிமை சேர்த்துப் பிறரை மகிழ்விக்கும கவிதையிலே சினத்தீ சொல்லுக்குச் சொல் வெளிப்பட்டது. கம்பரின் குரலும் அதற்கேற்ப உயர்ந்தது. அதன் கடுமையும் அவையினரைத் திகைப்படையச் செய்தது.


மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ!

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


என மீண்டும் பாடினார்.


குரங்குகள் கிளைகளிலே ஆளந்தமாகத் தாவிச் செல்லும் இந்தக கொம்புதான் குரங்கைத் தாங்கும். இது தாங்காது என்பதில்லை. தம்மை அடைந்த குரங்குகளை எல்லாக் கொம்புகளுமே தாங்கத்தான் செய்யும். ஆகவே, குரங்கு ஒன்றுக்கு இந்தக் கொம்பை விட்டுப் போகி றோமே? இனித் தாங்குவது எதுவோ? என்ற கவலையே கிடையாது. காடெல்லாம் மரங்கள். அந்த மரங்களின் கிளைகளுள் எதுவுமே அதனைத் தாங்கும்.


வேந்தரும் பிறகும் தன்னைப் போற்றி வழிபட்டு நிற்கப் பெரும் நதியோடு திகழும் தள்ளைக், கம்பர், பாடிப் பரிசில் பெற்றே நிலையினர் பழித்ததைக் கேடக நேர்ந்தது பற்றி அவன் எழுதினாள். என்றும், அவனுடைய எதிரேயே அங்கனம் எதிர்ப் இச்சுப் பேசினார் எவரும் அல்லர் என்பதனை நினைந்தபோது, ஆத்திரம் மேலும் பெரிதாயிற்று.


திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் நினைவு கூனுக்கு அப்போது வந்தது."


'கம்பரே! என்னை விட்டால் சடையப்பரின் ஆதரவு இருக்கிறதென்ற செருக்குத்தானே உம்மை இப்படிப் பேச வைத்தது. சடையப்பர் என் ஆணைக்கு உடபடடவர். அவர்க்கு இப்போதே தகவல் தெரிவித்து விடுகின்றேன். அவரிடமிருந்து சிறு உதவியும் இனிக் கிடையாதபடி செய்து விடுகின்றேன்"என்றான்.


சோழவின் பேச்சைக் கேட்டதும், கம்பரின் ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. வெண்ணெய்ச் சடையப்பரிடத்திலே கம்பருக்கு அளவுகடந்த பெருமதிப்பு உண்டு எனினும், சோழனின் பேச்சு. அவரைச் சிந்திக்கவும் வைத்தது.


காதம் இருபத்துநான் கொழியக் காசினியை

ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில்

கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீ முனையில்

இல்லையோ எங்கட்கு இடம்?


மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து

சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே

விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே


ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)

$
0
0


 திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம்


திகட சக்கரச் செம்முக மைந்துளான்

     சகட சக்கரத் தாமரை நாயகன்

          அகட சக்கர வின்மணி யாவுறை

               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


வேம்பத்தூராருள்‌ ஒருவராகிய பெருமாளையர்


நெல்லைவருக்கக்கோவை என்னும்‌. பிரபந்தத்தை இயற்றி முடித்தார்‌. மொழிக்கு முதலாகும்‌ உயிரெழுத்துக்களிலும்‌ உயிர்‌

மெய்யெழுத்துக்களிலும்‌ ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின்‌ முதலில்‌ முறையே வரும்படி. அகப்‌பொருட்டுறைகளைாக  அமைத்துப்பாடுவது வருக்கக்‌கோவையாகும்‌. பாம்பலங்காரர்‌ வருக்கக்கோவை, மாறன்‌ வருக்கக்கோவை


தேரோடும்‌ வீதியேலாஞ்‌ செங்கயலுஞ்‌ சங்கினமும்‌

நீரோ டூலாவிவரும்‌ நெல்லையே - காரோடும்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ கந்தரத்த ரந்தரத்தர்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ காப்பு


இச்‌ செய்யுளின்‌ பிற்பகுதியின்‌ பொருள்‌ வருமாறு :--


காரரோடும்‌-கருநிறம்‌ பரவிய, ,

கந்தரத்தர்‌- திருக்கழுத்தை யுடையவரும்‌

அந்தரத்தர்‌- ஞானாகாயத்தையே இருமேனியாகச்‌கொண்டவரும்‌

கந்து அரத்தர்‌ - பற்றுக்கோடாசிய செம்மைநிறமுடையவரும்‌,

அம்‌ தரத்தர்‌ - திருமுடியில்‌ நீரைத்‌ தாங்கியவரும்‌,

கந்தர்‌ அத்தர்‌ - முருகக்கடவுளின்‌ தந்தையாரும்‌,

அம்‌ தரத்தர்‌- அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான்‌

காப்பு- காவல்‌ புரிந்து வீற்றிருக்கும்‌ இடம்‌

அந்தரம்‌-ஆகாயம்‌

கந்து - பற்றுக்கோடு

அரத்தம்‌- சிவப்பு;,

அம்‌- நீர்‌, அழகு;

தரம்‌- தகுதி.


ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)

$
0
0

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு"குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


குருகிலை


‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். 


அஞ்சனம் காயா மலர குருகிலை

ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்”

தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர்

வந்தார் திகழ்நின் தோள்.


- திணைமொழி ஐம்பது (21)


அருவி அதிரக் குருகிலை பூப்பத்

தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற

வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்

பெரிய மலர்ந்த(து)இக் கார்.

- திணைமொழி ஐம்பது (30)


முருகியம்போல் வானம் முழங்கி இரங்க

குருகிலை பூத்தன கானம்.... ....”

கார் நாற்பது 27


குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்


இது முல்லை நிலத்தது .

இது கார் காலத்தில் பூப்பது

இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.


மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்

நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய

முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

- நான்மணிக்கடிகை



மருதம்


கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்'என்று கூறுவர். (மருது பாண்டியர்கள்)

Pride of India (இந்தியாவின் பெருமை)

சிங்களத்திலும் இதை ‘மருது’ என்றே அழைக்கின்றனர்.


Queen’s Flower (அரசிக்கு உகந்த பூ)

உழவர்க்கு நிழல்


………………………..ஓங்கிய

பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,

மருதமர நிழல், எருதொடு வதியும்

அகநானூறு (37)


நாகதெய்வக் கோயில்

மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.


பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் 

- பெரும்பாணாற்றுப்படை 232


மருத மாலை


பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28


“பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”

- நற்றிணை வரிகள் (350:2-3)


சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.


திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83

தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45

திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை


வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,

திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36


மருதூா்கள்


மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது.


தலைமருது - வட மருதூா் என்று வழங்கப்படுகிற ஸ்ரீ சைலம்

இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்

கடைமருது - திருநெல்வேலி பொருநைக் கரையின் திருப்புடை மருதூா்


மருத மரங்கள் நிறைந்த பகுதி மருதூா் ஆனது.


10) மதுரை


மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது.


செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்

துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50


மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்

மணல் மலி பெருந் துறைத்….. - பதிற்றுப்பத்து - 23


…………… காவிரிப்

பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த

ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை

குறுந்தொகை 258


11) மருத்துவ மரம்


ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்

காதமென வோடக் கடத்துங்காண் - போத

மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்

தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி


12) மருதமலை


கச்சியப்பர் பேரூர்ப் புராணத்திலும் "மருதமலை"பற்றி பாடியுள்ளார். (அபயப்படலம், மருதவரைப்படலம்)


முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்

உருகு மன்பர்க் குதவி செய்யவே

பெருகு காமர்ப் பிறங்க லாயினான்

அருகின் வேலு மருத மாயதே.


மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்

மருதம் பாட வாய்ந்த வேள்வரை

மருத நின்ற மறுவில் காடிசியான்

மருத வோங்அ லென்ன மன்னுமே.


பாம்பாட்டிச் சித்தர்


கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே

கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்

கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே


மருதையாறு, மருதப்பண்


குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட அகவர்

நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்

– பொருநராற்றுப்படை  (218-221)


ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)

$
0
0

 

அனுபவ ஞானம் 


மங்குல் அம்பதினாயிரம் யோசனை

  மயில்கண்டு நடமாடும்

தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை

  தாமரை முகம் விள்ளும்

திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச்

  சிறந்திடும் அரக்காம்பல்

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்

  இதயம் விட்டு அகலாரே

தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது

பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா

வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா

தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை

மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)

$
0
0

 

நோய் தீர்க்கும் பாடல்கள் - 2


ஒருவர் நோய்வாய்ப்  படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை  திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Songs that cure illness - 1


When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan of Thiruthanigai malai. It is believed that those who sing this get their illness cured. Let's explore about  it in this episode


References

திருப்புகழ் 243


தனதன தான தனதன தான

     தனதன தான ...... தனதான


......... பாடல் .........


இருமலு ரோக முயலகன் வாத

     மெரிகுண நாசி ...... விடமேநீ


ரிழிவுவி டாத தலைவலி சோகை

     யெழுகள மாலை ...... யிவையோடே


பெருவயி றீளை யெரிகுலை சூலை

     பெருவலி வேறு ...... முளநோய்கள்


பிறவிகள் தோறு மெனைநலி யாத

     படியுன தாள்கள் ...... அருள்வாயே


வருமொரு கோடி யசுரர்ப தாதி

     மடியஅ நேக ...... இசைபாடி


வருமொரு கால வயிரவ ராட

     வடிசுடர் வேலை ...... விடுவோனே


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

     தருதிரு மாதின் ...... மணவாளா


சலமிடை பூவி னடுவினில் வீறு

     தணிமலை மேவு ...... பெருமாளே.

Viewing all 170 articles
Browse latest View live


Latest Images