Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all 170 articles
Browse latest View live

ஞானத்தேடல் - Ep 30 - விதியை மதியால் வெல்ல முடியுமா?(Gnanathedal)

$
0
0

 


விதியை மதியால் வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்ல முடியுமா? என்பது பற்றி நம் முன்னோர்களும், தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate can it be won? Fate is believed to be what is written, let's explore what our ancestors, poets and Tamil literature have mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை, நல்வழி - Avvaiyar Moodhurai, Nallvazhi திருக்குறள் - Thirukkural தாயுமானவர் பாடல்கள் - Thayumaanavar Padalgal விதியை யும்விதித் தென்னை விதித்திட்ட மதியை யும்விதித் தம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி நின்னருள் கதியை எப்படிக் கண்டு களிப்பதே - தாயுமானவர் அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் - திருஞானசம்பந்தர் ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன் - ஔவையார் சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம் இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் - ஔவையார் தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி - ஔவையார் வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. - ஔவையார்


ஞானத்தேடல் - Ep 31 - கவி காளமேகம் வரலாறு - 1 (Gnanathedal)

$
0
0

 


கவி காளமேகம் வரலாறு - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal அதிமதுர​​ மென்​றே யகில மறியத் துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக் கூட்டுச் சரக்குத​னைக் கூறு வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச் சரியாசனம் வைத்த தாய் தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற் ​சொற் சந்தமா​லை ​சொல்லத் துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற் ​றொ​கைபட விரித்து​ரைக்கப் பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற் பரணி​யொரு நாண் முழுது​மே பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே பகரக் ​கொடிக் கட்டி​னேன் சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன் சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல் திருட்டுக் கவிப் புலவ​ரைக் காதங்கறுத்துச் ​சவுக்கிட்டடித்துக் கதுப்பிற் பு​டைத்து ​வெற்றிக் கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு கவி காள​மேக நா​னே விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங்கும்.


ஞானத்தேடல் - Ep 32 - கவி காளமேகம் வரலாறு - 2 (Gnanathedal)

$
0
0

 


கவி காளமேகம் வரலாறு -2 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Life History - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about his life history in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான் செய்யாத செய்த திருமலைராயன்வரையில் அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற் கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் மண்மாரி யாலழிய வாட்டு நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்; பாணந்தான் மண்தின்ற பாண​மே தாணு​வே! சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ ​நேரார் புர​மெரித்த ​நேர் வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசுகவி காள மேகமே – பூசுரா விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன் மண்தின்ற பாணமென்ற வாய்.

ஞானத்தேடல் - Ep 33 - கவி காளமேகம் பாடல்கள் - 1 (Gnanathedal)

$
0
0

 


கவி காளமேகம் பாடல்கள் - 1 காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 1 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் எடுப்பர் நடம்புரிவ ரேறுவரன் பர்க்குக் கொடுப்ப ரணிவர் குழைக்கு காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா தத்தித்தா தூதித்தா தூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்தா தூதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தோது தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி

ஞானத்தேடல் - Ep 34 - கவி காளமேகம் பாடல்கள் - 2 (Gnanathedal)

$
0
0


 கவி காளமேகம் பாடல்கள் - 2

காளமேகப் புலவர் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்ற ஒரு திறமை வாய்ந்த புலவர் அவர் பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Kavi Kaalamegam - Songs - 2 Kaalamega Pulavar is a renowned poet in Tamil literature. He was bestowed with great poetic knowledge. Let's see about the songs in this episode... References காளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam Thani Padalgal கத்துக் கடல்சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும்போதில் அரிசி வரும் – குத்தி உலையில் இட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம் நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும் வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம் ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே யோது சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார்

ஞானத்தேடல் - Ep 35 - பஞ்சபூதங்களும் இலக்கியமும் (Gnanathedal)

$
0
0

 


பஞ்சபூதங்களும் இலக்கியமும் உலக இயக்கத்தின் முக்கிய பங்கு பஞ்சபூதங்களுக்கு உண்டு. உலகையும் இயக்கி புலவர்களையும் இயக்கி இலக்கியதில் இடம் பெற்று உலகமக்களாலும் வழிபடப் பெற்று விளங்கும் பஞ்சபூதங்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... The Five Elements of Nature and Tamil Literature The Five elements of nature are important for the functioning of life in this planet. They direct the poets' thoughts and takes a place in the literature and is also worshipped by the people. Let's see about what literature says about the five elements of nature in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam புறநானூறு - Puranaanooru பரிபாடல் - Paripaadal நாலாயிர திவ்ய பிரபந்தம் - Naalayira Dhivya Prabandham (Thirumazhisai Azhwar Thiruchandha Viruththam) அகம் புற ஆராய்ச்சி விளக்கம் - Agam Puram Aaraachi Vilakkam குறள்மூலம் Avvaiyar Kural Moolam திருவாசகம் - Thiruvaasagam - Pottri Thiruagaval அபிராமி அந்தாதி - Abirami Andhadhi திருக்குறள் - Thirukkural நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் -  தொல்காப்பியம் மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய் - புறநானூறு பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடு போர் அண்ணால்! அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; முந்தியாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே, இரண்டின் உணரும் வளியும் நீயே, மூன்றின் உணரும் தீயும் நீயே, நான்கின் உணரும் நீரும் நீயே, ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே. அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்! - பரிபாடல் நல்லெழுதியார் பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே? - திருமழிசைப்பிரான் திருச்சந்த விருத்தம் நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண் (5) - ஔவையார் குறள்மூலம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - போற்றித் திருஅகவல் திருவாசகம் பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே. - அபிராமி அந்தாதி திருக்குறளும் பஞ்சபூதம் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்  வகைதெரிவான் கட்டே யுலகு (27) - திருக்குறள் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஞானத்தேடல் - Ep 36 - மலரின் பருவங்கள் (Gnanathedal)

$
0
0


 மலரின் பருவங்கள்

மலர்கள் பற்றி கூறாத இலக்கியங்கள் இல்லை எனலாம். இறையை வணங்கும் போதும், காதல் அறிவிக்கும் போதும், மென்மையை குறிப்பிடும் போதும் மலர்களோடு ஒப்புமை செய்யப்படும். ஆனால் மலர்களுக்கு பருவங்கள் வகுத்து, அந்த பருவங்களுக்கு பெயரும் கொடுத்துள்ளது நம் இலக்கியங்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of a flower Flowers are described in almost all Tamil literature. Flowers are used to worship of the Gods, to express love and to compare with softness. However, our literature has classified different stages of a flower and also named each stage, let's explore that in this episode... References குறுந்தொகை - Kurunthokai அகநானூறு - Aganaanooru திருவாசகம் - Thiruvaasagam திருக்குறள் - Thirukkural ## குறுந்தொகை கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. ## பூக்கும் பருவத்தின்  முதல் நிலை - அரும்பு மொக்குவிடும் நிலை - மொட்டு  முகிழ்க்கும் நிலை- முகை பூவாகும்  நிலை - மலர் மலர்ந்த இதழ் விரிந்த நிலை - அலர் வாடும் நிலை - வீ வதங்கிக் கிடக்கும் நிலை - செம்மல் அரும்பு ,நனை ,முகை, மொக்குள்,  முகில், மொட்டு,போது, மலர் , பூ  , வீ ,   பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள். அரும்பு - அரும்பும் நிலை நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை  முகை - தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில மொக்குள் - பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம்   அதாவது மணம் பெறும் நிலை. மொக்குள் பருவத்தில்தான் பூவில் மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும். முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ். போது  - மொட்டு மலரும்போது ஏற்படும் புடைப்பு நிலை மலர் - மலரும்  பூ அதாவது மலர்ந்த நிலை பூ - முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர் வீ  - உதிரும்  நிலையில் இருக்கும் பூ பொதும்பர் - பூக்கள்  பூத்துக்குலுங்கி நிற்கும் நிலை பொதும்பர்  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ செம்மல் - உதிர்ந்த பழம் பூ ## அகநானூறு புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை சுரிமுகிழ் முசுண்டைப் பொதியவிழ் வான்பூ # திருவாசகம் தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே ## திருக்குறள் காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் முகைமொக்குள் உள்ள  நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

ஞானத்தேடல் - Ep 37 - பெண்ணின் பருவங்கள் (Gnanathedal)

$
0
0


பெண்ணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Stages of Women

In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode...

References

வெண்பாப் பாட்டியல் - Venba Paatiyal
மஹாபரத சூடாமணி - Mahabharatha Soodamani
பன்னிரு  பாட்டியல் - Panniru Paatiyal
திருக்கைலாய ஞானஉலா - Thirukailaya Gnana Ulaa

உலா இலக்கணம்

திறந்தெரிந்த பேதைமுத லெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்தகலி
வெண்பா வுலாவாம்
- வெண்பாப் பாட்டியல்

பேதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு
- மஹாபரத சூடாமணி

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை:25-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே. 
- பன்னிரு  பாட்டியல் - 220

பேதை          : 1 முதல் 8 வயது வரை
பெதும்பை : 9 முதல் 10 வயது வரை
மங்கை       : 11 முதல் 14 வயது வரை
மடந்தை      : 15 முதல் 18 வயது வரை
அரிவை      : 19 முதல் 24 வயது வரை
தெரிவை     : 25 முதல் 29 வயது வரை
பேரிளம்      : பெண் 30 வயது முதல்

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. - 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். - 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்

திரண்ட பதினா லளவும் சாற்றும். - 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்

திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். - 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. - 225

தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது. - 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்புஎன மொழிப. - 227


பேதை தனக்குப் பிராயமும் ஏழு. பெதும்பை ஒன்பது
ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும் ஒளிர் மடந்தை
மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவைச்
சாதி மூவேழ் எனும், பேரிளம் நாலெட்டு தையலர்க்கே
- தனிப்பாடல்

திருக்கைலாய ஞானஉலா

பேதை (அறியா வெகுளிப் பருவத்தாள்)

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்;

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்

பெதும்பை

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்

மங்கை

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள்

மடந்தை

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்

அரிவை

செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள்

தெரிவை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்

பேரிளம்பெண்

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள்


ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

$
0
0

 

ஆணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal புறநானூறு - Puranaanooru ஐங்குறுநூறு - Ainkurunooru கம்பராமாயணம் - Kambaramayanam பொருநராற்றுப்படை - Porunaraatruppadai பெரும்பாணாற்றுப்படை - Perumpaanaatruppadai திருப்புகழ் - Thiruppugazh பரத சேனாபதீயம் - Bharatha Senapathiyam கந்தர் அந்தாதி - Kandhar Andhaadhi பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi திருப்பாணாழ்வார் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram பாலன்:  1 முதல் 7 வரை மீளி:  8 முதல் 10 வரை மறவோன்: 11 முதல் 14 வரை  திறவோன்: 15 வயது  காளை: 16 வயது  விடலை: 17 முதல் 30 வரை முதுமகன்: 30 வயதுக்கு மேல் காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே பாலன் யாண்டே ஏழ்என மொழிப மீளி யாண்டே பத்துஇயை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந்து ஆகும் பதினாறு எல்லை காளைக்கு யாண்டே அத்திறம் இறந்த முப்பதின் காறும் விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன் நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப - பன்னிருப் பாட்டியல் ### பாலன் வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே - பெரியாழ்வார் திருமொழி செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே - கந்தர் அந்தாதி சே புங்கவ சங்கர பாலக தெய்வ வாவி அம்பு சே புங்கவ சங்கு அரி மருகா என சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் கணும் தெய்வயானைத் (தனச்) செப்பும் கவசம் புனை புயன் பாதம் என் சென்னியதே ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. - திருப்பாணாழ்வார் பாசுரம் உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே - பரத சேனாபதீயம் குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் - திருப்புகழ் ### மீளி கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி - பெரும்பாணாற்றுப்படை ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு - பொருநராற்றுப்படை ### மறவோன் நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் - கம்பராமாயணம் ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன் - கம்பராமாயணம் ### காளை அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே - புறநானூறு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு ### விடலை புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே - ஐங்குறுநூறு களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே - ஐங்குறுநூறு ###முதுமகன்வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் -மணிமேகலை நன் றாய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன் வாய் போகாது, ஒன்று புரிந்த ஈரி ரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் - புறநானூறு தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு - புறநானூறு * உறையூர் முதுகண்ணன் சாத்தனார் * பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி * உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்)

ஞானத்தேடல் - Ep 39 - பிள்ளைத்தமிழ் (Gnanathedal)

$
0
0

 


பிள்ளைத்தமிழ் தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு"எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Pillai Tamizh In Tamil literature there is a specific types of song where a favourite God or a hero is personified as a baby and songs are sung in praise indicating the various stages of the baby's life from 3 months to 21 months. That form is called the Pillaithamizh. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi ஆண்டாள் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது. காப்பொடு செங்கீரை தால்சப் பாணி யாப்புறு முத்தம் வருகவென் றன்முத லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர் நம்பிய மற்றவை சுற்றத் தளவென விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர் - பன்னிருபாட்டியல் சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே பம்புசிறு தேரோடும் பத்து " - வெண்பாப் பாட்டியல் பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின் மூன்று முதலா மூவே ழளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.” “ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்'' - பன்னிருபாட்டியல் திருந்திய பெண்மக வாயின் விரும்பிய பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர் பெண்பா லாயிற் பின்னர் மூன்று மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர் சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும் சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல் பொற்பமர் குழமகன் புனைமணி யூசல் யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு வேண்டுத றானும் விளம்பினர் புலவர் பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடுங் கழங்கு அம்மானை ஊசல் பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாள் கிளையளவாம் - இலக்கண விளக்கப் பாட்டியல் ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும் • மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும். தூநிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வாவென்று நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம் கோநிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி. - பெரியாழ்வார் பாசுரம் பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலோ நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன. ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக * அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார். * சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதியுள்ளார். * அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதினார். * வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதினார். வாகடம் என்றால் மருத்துவ நூல். * ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத்தமிழ் என்பது அமைந்துள்ளது. நாதன் விளையாட் டறுபத்து நாலு நடத்தும் தமிழ்மதுரை நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தருட்புலவர் ஓதும் தலைச்சங் கத்தினுக்கு முயர்நா னூற்று நாற்பதுடன் ஒன்பதான தமிழ்ப்புலவ ரொழியா இடைச்சங் கத்தினுக்கும் வேத னிகர்நக் கீரர்முதல் விரிவா நாற்பத் தொன்பதுபேர் மேவும் கடைச்சங் கத்தினுக்கும் விதிசொல் குருவா மகத்தியற்கும் ஆதி குருவா மாறுகுணத் தமலா தாலோ தாலேலோ ஆல வாய்வா ழாறுமுகத் தையா தாலோ தாலேலோ. - க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் பாடல்

ஞானத்தேடல் - Ep 40 - விவேக சிந்தாமணி கதைகள் - 1 (Gnanathedal)

$
0
0


 விவேக சிந்தாமணி கதைகள் - 1

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stories in Viveka Chithamani - 1 Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode References விவேக சிந்தாமணி - Viveka Chithamani 1. வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 2. சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர் நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரிசொல் கேட்டு வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப் புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம் 3. புத்திமான் பலவான் வான் பலமுளான் புத்தி அற்றால் எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும் மற்றொரு சிங்கம் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே. 4. கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான் பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல் முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

ஞானத்தேடல் - Ep 41 - விவேக சிந்தாமணி கதைகள் - 2 (Gnanathedal)

$
0
0

 


விவேக சிந்தாமணி கதைகள் - 2

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Stories in Viveka Chithamani - 2

Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode


References

விவேக சிந்தாமணி - Viveka Chithamani


1. கொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்

விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை

மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு

வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்


2. கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்றுநாளும்

இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று

விரிதலை வேடன் கையில் வில்குதை நரம்பைக் கவ்வி

நரியனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ


3. வல்லியம் தனைக் கண்டு அஞ்சி மரம்தனில் ஏறும் வேடன்

கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்

நல்லவன் தனக்குச் செய்த நலமது மிக்கதாகும்

புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்குவாரே. 


4. கரந்தொருவன் கணை தொடுக்க மேற்பறக்கும்

      இராசாளி கருத்தும் கண்டே

உரைந்து சிறு கானகத்தில் உயிர்ப் புறா பேடு

      தனக்கு உரைக்கும் காலை

விரைந்து விடம் தீண்ட உயிர் விடும் வேடன்

      கணையால் வல்லூறும் வீழ்ந்தது

அரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் 

      ஆவதுண்டோ அறிவுள் ளோரே

ஞானத்தேடல் - Ep 42 - விவேக சிந்தாமணி கதைகள் - 3 (Gnanathedal)

$
0
0

 

விவேக சிந்தாமணி கதைகள் - 3

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

Stories in Viveka Chithamani - 3

Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode

References

விவேக சிந்தாமணி - Viveka Chithamani


1. குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே

அரங்கு முன்புநாய் படிக் கொண்டாடிய அதுபோல்

கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு

சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.


2. சலந்தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது

கொலைபுரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல

வலுவினால் அவனை வெல்ல வலுவொன்றும் இல்லை என்றே

கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே


3. மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே

ருதுவது காலந்தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்

புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே

அதிருடன் கடி உண்டு அன்றே அருநரகு அடைந்தான் மாதோ


4. மையது வல்லியம் வாழ் மலைகுகை தனில் புகுந்தே

ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும் காலை

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட

வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தன்றே.

ஞானத்தேடல் - Ep 43 - சகுனம் - 1 - (Gnanathedal)

$
0
0

 

சகுனம் - 1

சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Sagunam (Signs/Omen) - 1

Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode

References


செந்தலை கருடன் வந்திடம் பாய்ந்தால்

கங்கையின் பொருளும் தன் கையில் கிடைக்கும்


வால்‌ நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம்‌ போனால்‌, கால்நடையாய்ப்‌ போனவர்கள்‌ கனக தண்டிகை ஏறுவாரே


போத்திடம் பாய்ந்தால் மேத்தடம் வையாதே


 'நாளும் புள்ளும் பிறவற்றினி மித்தமும்' 

- தொல்காப்பியம் 


மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெம்சின விறல்வேல் காளையொடு

அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

- ஐங்குறுநூறு 


திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

- குறுந்தொகை


என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்

நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா

துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்

அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்

.. 

- புறநானூறு (280)


பாக்கத்து விரிச்சி


நல்ல காரியத்திற்குப் புறப்படும்போது நல்ல வார்த்தை கேட்பது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது. 


இந்த நம்பிக்கை இன்றும் நிலவுவதைக் தொல்காப்பியர் இதனைப் 'பாக்கத்து விரிச்சி'எனக் குறிப்பிடுகிறார்.


படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

- தொல்காப்பியம் 


விரிச்சி நிற்றல், வாய்ப்புள், பறவாப்புள், நற்சொல்


வேற்றுநாட்டு ஆனிரைகளை(பசுக்களை)க் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள் விரிச்சி பார்ப்பார்களாம். இதற்குப் பாக்கத்து விரிச்சி என்று பெயர்


வாய்ப்புள் 


ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளையும் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.


பறவாப்புள்


வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு

ஈண்டுஇருள் மாலை சொல்ஓர்த் தன்று

- புறப்பொருள் வெண்பாமாலை


நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு

செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா

- புறநானூறு (280)


வேதின வெரிநின் ஓதி முது போத்து

ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர் - 

- குறுந்தொகை (140)


## நற்சொல்

பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் (முல்லைப்பாட்டு, 7-11)

திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற்றிணை 40)

புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம் (குறுந்தொகை 218)


கனவுகாணல், பல்லி சொல்லுதல், கண் துடித்தல் பற்றிய நம்பிக்கைகளையும் காண்கிறோம். 

இடக்கண் துடிப்பது பெண்களுக்கு நல்லது

தலைவனை எதிர்நோக்கும் தலைவிக்குக் கண் துடித்தால், தலைவன் விரைவில் வருவான் என நம்புகிறாள்.

நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு -  (ஐங்குறுநூறு)

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே -  (கலித்தொகை)


தும்மல் 

மன்ற முதுமரத்து ஆந்தை குரலியம்பக்

குன்றகம் நண்ணிக் குறும்பிறந்து சென்றவர்

உள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்

தொள்ளிய தும்மல் வரும்

- ஐந்திணை எழுபது


பல்லி 

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறென நடுங்கிப்

புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே

- அகநானூறு (289)


ஞானத்தேடல் - Ep 44 - மருத்துவம் - 1 - (Gnanathedal)

$
0
0

 


காலையில் இஞ்சி 
கடும்பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய்
மண்டலம் உண்டிடில் 
விருத்தனும் பாலனாமே 


திருவள்ளுவர் மருந்து அதிகாரம்

For the people

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.942

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.943

பசித்து புசி 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.945

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.947

For the doctors

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.941

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.948

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.


ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal)

$
0
0

 


தமிழின் மேன்மை தமிழ் மொழியின் மேன்மை பற்றி சில நிகழ்வுகள் மூலம் இந்த பதிவில் பார்ப்போம்... Tamil's Greatness Let's explore Tamil's greatness with a few example incidents in this episode References திட்டினால் கூட தமிழில் திட்டு மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. - கந்தரலங்காரம் வைகை நதி நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று வாரியிடம் புகுதா வைகையே – மாறி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. - புகழேந்திப் புலவர் வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டமொடுமெய்ச் செய்கை தவிர்க்குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு தாக நடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும் ஏகுமிந்த வையம் விடுத்தே. - தேரையர் ராமாயணம் தீவைத்தான் தீவைத்தான்

ஞானத்தேடல் - Ep 46 - விரதம் - (Gnanathedal)

$
0
0

 

விரதம் விரதம் - உண்ணா நோன்பு பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fasting Let's explore about fasting and its references in Tamil culture and literature in this episode References வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் வண்ணம்கண்டு நான்உம்மை வணங்கிஅன்றிப் போகேன்என் றெண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அன்னிமிஞிலி பாசிலை அமனற் பயறு ஆ புக்கென வாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள் மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன் செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் - ( அகம் குறிஞ்சி பரணர் 262) வடக்கிருத்தல் 1. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது வடக்கிருத்தல் என்னும் நோன்பை பின்பற்றி பிசிராந்தையார் விரதமிருந்து உயிர் துறந்தார். பொத்தியார் 2. கபிலர் - பாரி இறந்ததை எண்ணி துக்கம் தாழாமல் வடக்கிருந்தார் 3. ### வெண்ணிப் பறந்தலை கரிகால் வளவன் | சேரலாதன் கழாத்தலையார் - புறம் 65 மாமூலனார் - அகம் 55 வெண்ணிக் குயத்தியார் - புறம் 66 கரிகால் வளவனோடு வெண்ணிப் புறந்தலை பொருது புண்நாணிய சேரலாதன் வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. - சிறுபஞ்சமூலம் 71 குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.


ஞானத்தேடல் - Ep 47 - வறுமை நீங்க - (Gnanathedal)

$
0
0

 

வறுமை நீங்க வறுமை பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது நீங்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Poverty Let's explore about what Tamil literature says about poverty and the means to get out of it in this episode References கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய் அதனினுங் கொடிதே அன்பில்லாப் பெண்டிர் அதனினுங் கொடிதே இன்புற அவள் கையில் உண்பது தானே! - ஔவையார் தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும் வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும் ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே - விவேக சிந்தாமணி மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் - ஔவையார் நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே கந்தர் அநுபூதி 19 (வறுமையை நீக்கி அருள்வாய்) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்; அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின் ஆணை வழி நடப்பேன்; ஆண்டே-ஆணைவழி நடப்பேன்


ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal)

$
0
0

 


கோபம் தவிர் கோபம் பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது தவிர்க்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Poverty Let's explore about what Tamil literature says about anger and the ways to manage it in this episode References ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே - விவேக சிந்தாமணி வெகுளாமை அதிகாரம் செல்லிடத்துக் காப்பான் சீனங்காப்பான் அல்லிடத்து காக்கின் என்ன காவாக்கால் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - அதிகாரம்:இன்னா செய்யாமை அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் - அதிகாரம்:அறன் வலியுறுத்தல் காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் - அதிகாரம்:மெய்யுணர்தல் ஆறுவது சினம் – ஆத்திச்சூடி கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - மூதுரை நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம் - நாலடியார் வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே (2303) - திருமந்திரம் உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு? - நன்னெறி, சிவப்பிரகாச சுவாமிகள்

ஞானத்தேடல் - Ep 49 - கலிகாலத்தின் கொடுமை - (Gnanathedal)

$
0
0

 


கலிகாலத்தின் கொடுமை கலிகாலத்தின் கொடுமை பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Effects of Kaliyugam Let's explore about effects of Kaliyugam in this episode References குமரேச சதகம் தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர் தந்தையைச் சீறுகாலம் சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச் சற்றும்எண் ணாதகாலம் பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம் புரட்டருக் கேற்றகாலம் பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்நற் பெரியர்சொல் கேளாதகாலம் தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்மிகு சிறியவன் பெருகுகாலம் செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்வசை செப்புவோர்க் குதவுகாலம் வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு வாய்த்தகலி காலம்ஐயா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (57)

Viewing all 170 articles
Browse latest View live