Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)

$
0
0


 திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம்


திகட சக்கரச் செம்முக மைந்துளான்

     சகட சக்கரத் தாமரை நாயகன்

          அகட சக்கர வின்மணி யாவுறை

               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


வேம்பத்தூராருள்‌ ஒருவராகிய பெருமாளையர்


நெல்லைவருக்கக்கோவை என்னும்‌. பிரபந்தத்தை இயற்றி முடித்தார்‌. மொழிக்கு முதலாகும்‌ உயிரெழுத்துக்களிலும்‌ உயிர்‌

மெய்யெழுத்துக்களிலும்‌ ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின்‌ முதலில்‌ முறையே வரும்படி. அகப்‌பொருட்டுறைகளைாக  அமைத்துப்பாடுவது வருக்கக்‌கோவையாகும்‌. பாம்பலங்காரர்‌ வருக்கக்கோவை, மாறன்‌ வருக்கக்கோவை


தேரோடும்‌ வீதியேலாஞ்‌ செங்கயலுஞ்‌ சங்கினமும்‌

நீரோ டூலாவிவரும்‌ நெல்லையே - காரோடும்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ கந்தரத்த ரந்தரத்தர்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ காப்பு


இச்‌ செய்யுளின்‌ பிற்பகுதியின்‌ பொருள்‌ வருமாறு :--


காரரோடும்‌-கருநிறம்‌ பரவிய, ,

கந்தரத்தர்‌- திருக்கழுத்தை யுடையவரும்‌

அந்தரத்தர்‌- ஞானாகாயத்தையே இருமேனியாகச்‌கொண்டவரும்‌

கந்து அரத்தர்‌ - பற்றுக்கோடாசிய செம்மைநிறமுடையவரும்‌,

அம்‌ தரத்தர்‌ - திருமுடியில்‌ நீரைத்‌ தாங்கியவரும்‌,

கந்தர்‌ அத்தர்‌ - முருகக்கடவுளின்‌ தந்தையாரும்‌,

அம்‌ தரத்தர்‌- அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான்‌

காப்பு- காவல்‌ புரிந்து வீற்றிருக்கும்‌ இடம்‌

அந்தரம்‌-ஆகாயம்‌

கந்து - பற்றுக்கோடு

அரத்தம்‌- சிவப்பு;,

அம்‌- நீர்‌, அழகு;

தரம்‌- தகுதி.



Viewing all articles
Browse latest Browse all 170

Trending Articles