Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)

$
0
0

 

கம்பர் கட்டிய சுவர்


சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம்


கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம்


“தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை”


தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை


போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே.


மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


"இவ்வுலகில் மன்னவனாக இருப்பவள் நீ ஒருவன் தானோ வளமான நாடாக இருப்பதும் நின் சோணாடு மட்டுந்தானோ. உன்னை அறிந்ததன் பின்போ யாள் தமிழினைக் கற்றுணர்ந்தேன. குரங்கு தாவினால் அதனைத் தாங்காது போகும் மரக்கொய் யாதும் உண்டோ? இல்லையன்றே! அங்ஙனமே, யான் இங்கிருந்தும் அகன்றால், என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்தனும் உண்டாமோ?"என்பது பாடலின் பொருள்.


"அங்ஙனம் எவன்தான் ஆதரிக்கிறான் என்று பார்க்கலாம என்று குலோத்துங்கன் சீறினான். கம்பரின் சீற்றமும் அதனால் மிகுதியாயிற்று. தாம் இருப்பது சோழனின் அவை என்பதையும் அவர் மறந்தனர். அவன் ஆதரவில் தாம் இருந்ததையும் மறந்தனர். தம்மை அவமதித்த சோழனின் செயலே அவர்முன் நின்றது. கவியுள்ளம் பொங்கியது. தமிழால் நிறைந்த கம்பரின் நெஞ்ச திலே தணல் மூண்டது. இனிமை சேர்த்துப் பிறரை மகிழ்விக்கும கவிதையிலே சினத்தீ சொல்லுக்குச் சொல் வெளிப்பட்டது. கம்பரின் குரலும் அதற்கேற்ப உயர்ந்தது. அதன் கடுமையும் அவையினரைத் திகைப்படையச் செய்தது.


மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ!

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


என மீண்டும் பாடினார்.


குரங்குகள் கிளைகளிலே ஆளந்தமாகத் தாவிச் செல்லும் இந்தக கொம்புதான் குரங்கைத் தாங்கும். இது தாங்காது என்பதில்லை. தம்மை அடைந்த குரங்குகளை எல்லாக் கொம்புகளுமே தாங்கத்தான் செய்யும். ஆகவே, குரங்கு ஒன்றுக்கு இந்தக் கொம்பை விட்டுப் போகி றோமே? இனித் தாங்குவது எதுவோ? என்ற கவலையே கிடையாது. காடெல்லாம் மரங்கள். அந்த மரங்களின் கிளைகளுள் எதுவுமே அதனைத் தாங்கும்.


வேந்தரும் பிறகும் தன்னைப் போற்றி வழிபட்டு நிற்கப் பெரும் நதியோடு திகழும் தள்ளைக், கம்பர், பாடிப் பரிசில் பெற்றே நிலையினர் பழித்ததைக் கேடக நேர்ந்தது பற்றி அவன் எழுதினாள். என்றும், அவனுடைய எதிரேயே அங்கனம் எதிர்ப் இச்சுப் பேசினார் எவரும் அல்லர் என்பதனை நினைந்தபோது, ஆத்திரம் மேலும் பெரிதாயிற்று.


திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் நினைவு கூனுக்கு அப்போது வந்தது."


'கம்பரே! என்னை விட்டால் சடையப்பரின் ஆதரவு இருக்கிறதென்ற செருக்குத்தானே உம்மை இப்படிப் பேச வைத்தது. சடையப்பர் என் ஆணைக்கு உடபடடவர். அவர்க்கு இப்போதே தகவல் தெரிவித்து விடுகின்றேன். அவரிடமிருந்து சிறு உதவியும் இனிக் கிடையாதபடி செய்து விடுகின்றேன்"என்றான்.


சோழவின் பேச்சைக் கேட்டதும், கம்பரின் ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. வெண்ணெய்ச் சடையப்பரிடத்திலே கம்பருக்கு அளவுகடந்த பெருமதிப்பு உண்டு எனினும், சோழனின் பேச்சு. அவரைச் சிந்திக்கவும் வைத்தது.


காதம் இருபத்துநான் கொழியக் காசினியை

ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில்

கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீ முனையில்

இல்லையோ எங்கட்கு இடம்?


மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து

சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே

விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே



Viewing all articles
Browse latest Browse all 170

Trending Articles