சித்திரக்கவி - ஏகநாகபந்தம்
வந்தறந் தோய்ந்தி வையமுயத் தந்தநம் வாமிசுதன்
தந்திரஞ்சேர் மதமார்வார் முன் சாய்ந்தவபோதனுசன்
சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய் செந்தில்
வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சிதசிவ
இவ்வுலக முக்திக்காக, முருகப் பெருமான் அனைத்து உன்னத குணங்களுடனும் வந்தார். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர் காலில் விழுவார்கள். இவரை வழிபடும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தமிழ் மக்களாகிய நமக்கு அவரைப் பிறப்பித்த சிவபெருமானைப் போற்றுகிறோம்
என்ராமச் சந்திரன் இன்ப மலிசத்தி
என்னவே தன்பேர்சீர் மன்னவே - வன்புவியிற்
பல்லூழி வாழிகவி யேற்றல்மா வாணியவள்
நல்கல்பூ வாகையருள் நன்கு.
என் ராமச்சந்திரன் என்றும் இன்பமிக்க செல்லப் பெயர் சத்தி யென்றும் யாவரும் கூறக்கூடிய தனது பேரும் புகழும் நிலைபெற, வலிமையான பூமியின் கண்ணே கவிகளையேற்றலால், இலக்குமி யும் சரசுவதியும் அழகிய வெற்றிமாலையும் நன்றாகக் கொடுக்க அருள் தங்கித் தலைவன் பல்லூழி வாழ்க,
Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html