Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)

$
0
0


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்



Viewing all articles
Browse latest Browse all 170

Latest Images

Trending Articles



Latest Images